Month: மே 2026

வேதாந்தா விபத்து : தொழிலாளர்களின் பாதுகாப்பை விழுங்கும் இலாப வெறி

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மரணத்தின் நிழலிலேயே உழைக்கிறார்கள். இந்தியத் தொழிற்சாலைகளில் அன்றாடம் தொழிலாளர்களுக்கு நிகழக்கூடிய மரணங்களும், காயங்களும் ஒரு செய்தியாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈசல் பூச்சியாய் வந்த வேகத்தில், மறைந்து விடுகின்றன. மேலும் சில மரணங்களும்,…

விண்ணை முட்டும் மருத்துவச் செலவுகள் :
கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும்
காப்பீட்டு நிறுவனங்களும்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ளதென்பது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம். ஆனால், இது எந்தளவிற்குப் பொதுமக்களுக்கானதாக என்பதிலிருந்தே இதை நாம் பெருமையாகப் பார்க்க முடியும். உண்மையிலேயே, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் தனியார்துறை மருத்துவத்திற்காகச் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் அதிகளவு…

நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த…

சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை

நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு…

வந்தே மாதரம்: தேசப்பற்றா? இந்துத்துவ திணிப்பா?

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். இதற்கு தவெக தரப்போ, இது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல், பின்பற்றியாக வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்ததால் தவிர்க்க இயலவில்லை…

திருப்பரங்குன்றமும் சபரிமலையும்

நீண்ட இழுபறிக்குப் பிறகு நடிகர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் இன்று பதவியேற்கவிருக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே அவர் முகம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் மூலமாக மும்மொழிக் கொள்கையைத்…

நாசிக் டி.சி.எஸ். : பாலியல் குற்றத்தை “கார்ப்பரேட் ஜிகாத்” என மடை மாற்றும் காவி பாசிஸ்டுகள்

காவி பாசிஸ்டுகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு பல்வேறு யுக்திகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் பசுவைக் கொன்றுவிட்டார்கள், இந்துக் கோயில்களை அசுத்தம் செய்துவிட்டார்கள் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காவி பாசிஸ்டுகளின் கைகளில் வலுவான ஆயுதங்களாகச் சேவையாற்றி…

தமிழ்நாட்டு மக்கள் ஏன் விஜயைத் தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் அடுத்த முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். இந்தத் தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பியிருந்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்று…

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்

Sanford C. Bernstein (சுருக்கமாக “பெர்ன்ஸ்டீன்”) என்ற சர்வதேச முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பங்குச்சந்தை பகுப்பாய்வு நிறுவனம் கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சியைத்…

தொழிலாளிகளை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களைத் தூக்கியெறிவோம்

இந்தியாவில் உள்ள 60 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற புதிய தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை அமுல்படுத்தப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி,…