செங்கனல்

செங்கனல்

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில், பேனா வாங்கும் போது கூட …

பாலியல் வன்கொடுமை, ஒரு சமூக கொடுமை!

    பாலியல் வன்கொடுமை என்பது, பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை விட்ட பாடில்லை. இது குறித்து கருத்து சொல்பவர்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பின்மையைச் சாடுகின்றனர். மேலும், பிள்ளைகளின் மீதான பெற்றோர்களின் பார்வையும் மாற வேண்டுமென கூறுகின்றனர். அதிலும், குடும்பங்களில் ஆண் பிள்ளைகளையும்…

ஒசூரில் மே தினம்!

ஒசூரில் தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மேதினத்தில் சூளுரைப்போம்! என்ற தலைப்பில் மே – 1 – 2025 இன்று காலை 9:00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின்…

திருச்சியில் மே தின ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம் என்ற தலைப்பில் மே – 1 – 2025 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆகியவற்றின்…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் :
இந்திய தேசிய வெறி, இந்துமதவெறி ஆகியவற்றை ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒழியாது!

    பத்திரிகை செய்தி – புரட்சிகர மக்கள் அதிகாரம் 24.04.2025   ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளிப்பகுதியில் பயங்கரவாதிகளால் (22.04.2025) அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதற்கு “தி…

நக்சல்பாரி கட்சி வரலாறு – வசந்தத்தின் இடிமுழக்கம்

இன்று ஏப்ரல் 22, மார்க்சிய ஆசான் லெனினின் 155 வது பிறந்த தினம் மற்றும் இந்திய புரட்சிகர வானில் விடிவெள்ளியாக தோன்றிய இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) உதயமாகி 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆரம்பத்தில் இடது தவறுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப் பிளவுக்கும் பின்னடைவுக்கும் தள்ளின. இதைச் சீர்செய்வதாக கூறிக்கொண்டு சில குழுக்கள் வலது சந்தர்ப்பவாதம்…

ஆப்பரேசன் காகர்: பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் உள்நாட்டு போர்!

ஆப்பரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழித்துக் கட்டுவதே இந்திய அரசின் நோக்கம் என்று தான் போகும் இடங்களிலெல்லாம் அறிவித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப்படைகள் …

ஜெய் ஸ்ரீராம்: மாணவர்களிடம் இந்து மதவெறியைத் தூண்டும் ஆளுநர் ரவி!

சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  

மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் …

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு.…

பரஸ்பர வரி – பதிலடி வரி என்ற பெயரில் உலக மேலாதிக்க அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரை முறியடிப்போம்!

  உலக மேலாதிக்க அமெரிக்காவின், அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் துவக்கமாக ஏப்ரல் 2 முதல் பதிலடி வரி அல்லது பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்கிற கத்தியை, இந்தியா, வெனிசுலா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகள் மீதும்…