Month: ஆகஸ்ட் 2025

தர்மஸ்தலா : புகாரளித்தவரைக் கைது செய்து, மாபியா கும்பலைக் காப்பாற்ற துடிக்கும் ஆளூம்வர்க்கம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி, கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர்…

தர்மஸ்தலா : ஆன்மீகம் என்ற பெயரில் கொட்டமடிக்கும் கிரிமினல் மாபியா கும்பல்.

ஆகஸ்டு – செப்டம்பர் 2025 – செங்கனல் இதழில் “தர்மஸ்தலா பயங்கரம்” என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தை இங்கே மீள்பதிவு செய்கிறோம். ************* தர்மஸ்தலா குறித்து இதுவரை நாம் கேள்விப்பட்டதெல்லாம், அது கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டப்பகுதியில் அமைந்துள்ளதொரு கோவில் நகரம்…

முதலமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் சட்டத்திருத்தம் – வேதம் ஓதும் மோடி அமித்ஷா கும்பல்

நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தார். இந்தச் சட்டத்திருத்தங்கள் நாட்டின் பிரதமரையும், எந்த ஒரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் முதல்வரையும், அமைச்சர்களையும், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத்…

அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா

உலகிற்கே விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். மோடிதான் உக்ரைன் போரை நிறுத்தப் போகிறார், ஜி 20 போன்ற சர்வதேச மாநாடுகளில் மோடியின் ஆளுமையை பன்னாட்டுத் தலைவர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், மோடியின் தலைமையில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகிறது என்பதை அமெரிக்காவே…

திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை…

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப்…

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் யாருக்கானது?

கடந்த வியாழக்கிழமை (21.08.2025) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை கூடகோவில் அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்கு முன்பு 27.10.2024 அன்று முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமம், விழுப்புரத்திலும், 2024-ஆம் ஆண்டு…

ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம். அதைப்போலவே…

You missed