செங்கனல்

செங்கனல்

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார்:
மக்கள் பணத்தில் முதலாளிகள் மஞ்சள் குளிப்பதற்கான ஏற்பாடு!

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோல் என்று ஆளும்வர்க்கங்களாலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மைல்கல் என்று பாஜகவாலும் பிரச்சாரம் செய்யப்பட்ட இத்திட்டம் அது முன்மொழிந்த இலக்குகள் எதையுமே எட்டவில்லை என்பதோடு தொழிற்துறைவளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் குறைந்திருக்கின்றன என்பதுமே எதார்த்தம்.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் …

ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்

  நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது. சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன, அம்பானி உலகப்…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிறுவ வெறித்தனமாக முயன்று வருகிறது. பாசிசம் என்பது மதவெறி, சாதிவெறியைக் …

வி.சி.க-வின் மது ஒழிப்பு மகளிர் மாநாடும்! சாராய வியாபாரிகளான திமுக – அதிமுகவின் பங்கேற்பும் !

  மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை, வருகிற 2-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடத்தப் போவதாக வி.சி.க அறிவித்துள்ளது. அதில் மதவாத பாஜகவையும், சாதியவாத பாமகவையும் தவிர, திமுக, அதிமுக, தவெக உட்பட இதர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாமென  அழைப்பு விடுத்துள்ளது. விசிக.வானது, ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இருப்பதால், சட்டமன்றத்திலேயே மது ஒழிப்பு கோரிக்கை…

திருப்பதி லட்டில் கலப்படம்:
சாமானியர்களின் நம்பிக்கையை
கலவரத்திற்கு பயன்படுத்தும் காவிகள்.

 

 

தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணம் தெரியாமல், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியும் புரியாமல் கையறுநிலையில் …

அமெரிக்க முதலாளிகளுக்கு சிவப்புக்கம்பளம் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு போலீஸ் அடக்குமுறை – இதுதான் திராவிடமாடல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான முதலீடுகளும்; வேலை வாய்ப்புகளும் சாத்தியமாகி இருப்பதாகவும் கூறுகிறது திமுக அரசு. ஏறத்தாழ 7,616 …

கேள்வி கேட்பதற்கான ஜனநாயகத்தை பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

  கோவை கொடிசியாவின் தொழில் முனைவர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது, அனைவரும் அறிந்ததே. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவ உரிமையாளரும், கோவை உணவக சங்க கௌரவ தலைவருமான சீனிவாசன், GST-யில் உள்ள நிறை, குறைகளை, குளறுபடிகளை இந்த பாசிச முண்டங்களுக்கு புரியும் வகையில் ஜனரஞ்சகமாக, எளிமையாக, நகைச்சுவையாக எடுத்து முன்வைத்தார். அதிலும், அவர் GST-யை குறைக்கவோ, ரத்து…

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து …

திராவிட மாடலின் இரட்டைவேடம்!

சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் சனாதனக் கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்த போலிச் சாமியாரான மகாவிஷ்ணு தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். சர்ச்சைக்குறிய அந்நிகழ்வுக்கு பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன் சர்ச்சைகுறிய நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடைபெற்றால் தலைமை ஆசிரியரும் …

சாதிமோதல்களை உருவாக்கும் கயிறுகளை மாணவர்கள் அணிவது மத உரிமையா?

 

காவி பாசிச சித்தாந்த கருத்துக்கள் அரசின் உறுப்புகளில் தொடர்ந்து விஷம் போலப் பரவி வருகிறது. இதற்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது அவ்வப்போது வரும் நீதிமன்றத் தீர்ப்புகளிலும், நீதிபதிகளின் கருத்துக்களிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காவி பாசிஸ்டுகளின் கோட்டையாக உள்ள உத்திரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். ஆனால் …