Author: செங்கனல்

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…

கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க PLI, சம்பளம் கொடுக்க ELI

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஊக்கத்தொகை (Employment Linked Incentive-ELI) என்ற திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதல் முறையாக EPFO-வில் பதியும் ஒரு தொழிலாளிக்கு ஊக்கத்தொகையாக அவருடைய முதல் மாத சம்பளத்தை (அதிகபட்சமாக 15000 ரூபாய்…

இரயில் கட்டண உயர்வு: மோடி அரசின் அடுத்த இடி!

“நான் நாட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரயில்வே யாரும் கற்பனை செய்திருக்க முடியாத மாற்றத்தைக் காணப்போகிறது” என்று, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்ததொரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மோடி.…

பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன்,…

ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் – கார்ப்பரேட் சேவையில் மோடியுடன் போட்டி போடும் காங்கிரஸ், தெலுங்குதேசம்

நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர். ஒரு நாளின் அதிகபட்ச…

பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள்…

நேட்டோ நாடுகள், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. வரவிருக்கும் போர்களுக்கான எச்சரிக்கை.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மாநாடு, கடந்த 25.06.2025 அன்று கூடியது. அதில், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு வருடமும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை நிதியைப் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள…

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் III

ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்திற்கு (JCPOA) ஆரம்பம் முதலே அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது, 2015-இல் “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு பயங்கரமான ஒப்பந்தம். இது ஈரானை பணக்கார…

மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் தொகை…

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் – II

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதிகளை கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு எனவும்; சர்வதேச அணுசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுசக்தி பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்வதற்கு 180 நாட்களுக்கு முன்பு…