Month: மார்ச் 2026

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டுமா?
 தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள்
உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடையாது. இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள்…

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…

பார் கவுன்சில் தேர்தல் – ஓட்டுக்கு துட்டு!
பொதுமக்கள், வழக்கறிஞர் உரிமைக்கு வேட்டு!!

பார் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அரசாங்கம் இதன் மீது நேரடியாக அதிகாரம் செலுத்த இயலாது. வழக்கறிஞர்கள் மீதும் பார் கவுன்சில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலும். நீதிமன்றமும், அரசாங்கமும் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை…

வெனிசுலா, ஈரானை அடுத்து கியூபாவைக் குறிவைக்கும் டிரம்ப்

கடந்த ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்புகள் என்ற பெயரில் வர்த்தகப் போரைத் தொடுத்து அவற்றைத் தனது மேலாதிக்கத்தை ஏற்கச் செய்யும் வேலையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நேரடியான இராணுவத் தலையீடுகள்…

மலக்குழி மரணங்கள் – இதுவே வல்லரசு இந்தியாவின் சாதனை!

“தூய்மை இந்தியா” என்ற திட்டத்தைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா? கையால் மலம் அள்ளுவது மற்றும் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்வதை ஒழிப்பது, அனைத்துக் குடும்பங்களுக்கும் நவீன கழிப்பிடங்களைக் கட்டித்தருவது என்று சொல்லி 2014-இல் இத்திட்டத்தைத் தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றுமாக கழிப்பறைகள் கட்டியதாக…

தொழிலாளி வர்க்கத்தை தூக்கிலேற்றும் மோடியின் புதிய சட்டம்!

மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதாக, இதுவரை போராடிப்பெற்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது என விளக்குகிறார் தோழர் பாலாஜி கிருஷ்ணன் ( கிளைச் சங்கத் தலைவர், ஒன்றுபட்ட தொழிலாளர்…

ஈரான் போர்; டிரம்ப் ஒரு காகிதப் புலியே!

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் தன்னுடைய பாசிச முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். எஞ்சியிருக்கும் தன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை மேற்காசியாவில் நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் மீது இரண்டாவது முறையாக போர் தொடுத்திருக்கிறார்.…

மாதவிடாய் விடுப்பு : பாகுபாட்டை நியாயப்படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலும் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களுக்கு, இந்த “முன்னேற்றம்” அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ அதற்கேற்ற மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக, முதலாளியின் இலாபத்திற்காக சம்பளம் பெறுகின்ற தொழிலாளியாகவும்,…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல்பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! 2026 தேர்தல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இலவசத் திட்டங்கள், பரிசுப் பொருட்கள், ஓட்டுக்குப் பணம், வாக்குறுதிகள் என சகல ஓட்டுக் கட்சிகளும் மக்களை ஏய்க்க முழுவீச்சுடன் களத்தில் இறங்கிவிட்டன. எல்லாக் கட்சிகளும் கார்ப்பரேட் சேவர்களே…