செங்கனல்

செங்கனல்

சிவகளை கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி – வெளியீடு

“சிவகளை கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி” என்ற வெளியீடு ஒன்றை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கொண்டுவந்திருக்கிறது. வரலாற்றைத் திரிக்கும் காவி பாசிச சக்திகளின் முயற்சியையும், அதற்கு எதிராக இருக்கும் தமிழ்நாட்டு அகழாய்வு முடிவுகளையும் குறித்து விரிவாக விளக்குவதுடன், காவி பாசிஸ்டுகள் ஏன் வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்றும், கீழடி சிவகளை அகழாய்வு முடிவுகள் எவ்வாறு காவி…

செங்கனல் ஆகஸ்ட் – செப்டம்பர் அச்சு இதழ்

செங்கனல் ஆகஸ்ட் – செப்டம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. விலை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!   இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: தர்மஸ்தலா பயங்கரவாதம்! இடம்பெறும் கட்டுரைகள்: பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் உருவாகிறது, இன்னொரு மணிப்பூர் நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்! நாங்கள் சொல்லவில்லை.. சி.பி.எம். …

சிவகளை, கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி!
சென்னை மற்றும் நெல்லையில் அரங்கக் கூட்டம்.

தமிழ்நாட்டில் சமீபமாக நடைபெற்றுள்ள பல தொல்லியல் அகழாய்வுகள், இந்திய அளவிலும் உலகளவிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவை. தூத்துக்குடி சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது. உலகின் தொன்மையான இரும்புப் பயன்பாடு, கி.மு. 2,500 ஆண்டுவாக்கில் அனடோலியா பகுதியில் தொடங்கியிருக்கலாம் என்பதே…

”சமூக நீதி” என பெயர் மாற்றினால் மட்டும் விடுதிகளின் அவலம் மாறிவிடுமா?

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்கிற பெயர்களில் இயங்கி வந்த நலத்துறை விடுதிகள் அனைத்தும் இனிமேல் ‘சமூக நீதி விடுதி’களாக அழைக்கப்படும் என சீனி சக்கரைச் சித்தப்பாவான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, இதுவரை பல்வேறு சமூக அடையாளங்களோடு இயங்கி வந்த மாணவர் நலத்துறை விடுதிகள் அனைத்தும், இனி, சமூக நீதி விடுதிகள் என்கிற…

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை! கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.! சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2025 துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர்…

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!

பத்திரிக்கைச் செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 27-07-2025 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை தமிழகத்தின் அரசியல் சக்திகள் அறிவார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு போடும் எச்சில்…

இந்து கோவில்களை காவி கும்பல் அபகரிக்க அனுமதிக்கலாமா?

  கல்விக்கென்று கடவுள் உள்ள இந்து மத கோவில்களில், கல்விக்கு இடமளிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்யும் சனாதன – பாசிச, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி காவிக் கும்பலானது, இது தொடர்பாக ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளது. இதற்கு, ஆதரவாக ஆட்சி மோகம் கொண்டு அலையும் திராவிட வாரிசான அதிமுக தலைவர் பழனிச்சாமியும், ஒரு படி மேலே போய் “கோவில்…

போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II

“நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள். தட்டிக்கேட்ட கணவனை அங்கேயே சுட்டுக் கொன்றனர். அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் …

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…