செங்கனல்

செங்கனல்

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின்…

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

அரசுப் பள்ளிகளில் படித்த முன்னால் மாணவர்களிடம் நிதி திரட்டி, அப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது தான் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டமாகும். இதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார்.

இத்திட்டம் ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் 50 கோடி நிதி கிடைத்திருப்பதாக பள்ளி …

தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தலும் ஆகாயப் புளுகன் ஆர்.என்.ரவியும்!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP-2020) எதிரான மனநிலை  பரவலாக காணப்பட்டாலும் ஒன்றிய அரசின் ஏஜென்டான ஆளுநர் ரவி கல்விக் கொள்கையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வது தொடர் கதையாகவே உள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ரவி தமிழக உயர்கல்வித் துறையில் கல்விக் கொள்கையை புகுத்துகின்ற வேலையையும் சனாதனத்தின் புகழ் பாடுவதையும் கூடவே மோடியின் …

வீட்டுப்பணியாளர்கள்: நவீன கொத்தடிமைகளா? நமது சக தொழிலாளர்களா?

பிற்போக்குக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் இந்தியக் குடும்பங்களில் வீட்டு வேலைகளைச் செய்வது இன்றைக்கும்கூட பெண்களின் பொறுப்பு என்ற எழுதப்படாத விதி உள்ளது. வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, சமைப்பது, குழந்தைகள், முதியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும் குடும்பத்துப் பெண்களின் கடமை என இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது. வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் கூட வீட்டு …

உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஏகாதிபத்திய முதலாளிகள் நடத்தும் மந்திராலோசனைக் கூட்டமே ஜி20 மாநாடு!

அடுத்த ஜி20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் புதுதில்லியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும், ரிசர்வ் வங்கி கவர்னர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

2023 செப்டம்பரில் நடக்கும் …

பொய் வழக்கிலிருந்து விடுதலை!

    கடந்த 2017 ஆம் ஆண்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்ற பெண்மணி சுகப்பிரசவத்தின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். இருந்த போதிலும் குழந்தை பிறந்த சில மணி நேரத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதை மருத்துவர்களிடம் உடனே தெரிவித்தனர். மருத்துவர்கள்…

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

 

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி மோடியின் இராஜ தந்திரத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மை ஏற்பட்டிருப்பதாகவும் காவிக்கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக அம்பானி உள்ளிட்ட தரகு …

கொலைகார பாக்ஸ்கான் கட்டுவது விடுதி அல்ல தொழிலாளர்களை அடைக்கும் சிறைச்சாலை

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்காக, பல்வேறு மாடல் ஐபோன்களை தமிழகத்தில் உள்ள ஶீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இதில் சுமார் 20,000 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்களே உள்ளனர்.

இந்நிறுவனம் தற்போது தன்னுடைய ஆலை வளாகத்தில் சுமார் 60,000 பேர் தங்க …

உலக முதலாளித்துவத்தை அழித்தொழிக்க ஸ்டாலின் பிறந்த தினத்தில் உறுதியேற்போம்!

டிசம்பர் 21 – தோழர் ஸ்டாலினின் 143-வது பிறந்தநாள்! தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!     தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை அந்த கம்யூனிச…

தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர்.

அவர்களது வாதப்படி பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது, தில்லி உள்ளாட்சித் …