செங்கனல்

செங்கனல்

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான ‪@U2Brutus‬ மைனர், முக்தார் ‪@MyIndia24x7‬ , ‪@OnionRoastChannel‬, ‪@TribesTamil‬ உள்ளிட்ட பல்வேறு …

சிவகளை அகழாய்வு முடிவுகள் – காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! – திரு. ஆசைத்தம்பியின் உரை

சிவகளை அகழாய்வு முடிவுகள் காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! என்ற தலைப்பில் திருநெல்வேலியில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு நடத்திய அரங்க கூட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் பல்வேறு அகழாய்வுகளில் பங்காற்றிய திரு.ஆசைத்தம்பி அவர்களின் உரை.   …

பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை அல்ல!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வக்கிரத் தீர்ப்பு!

  உத்திரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.  அதற்கு முன்பாக சிறுமியின் மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த அச்சிறுமி சப்தமிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர்.…

கல்வியை தனியார்மயமாக்கும் சகாக்கள்

இடது ஜனநாயக முன்னணி ஆட்சிசெய்யும் கேரளாவில் நாட்டின் பிற மாநிலங்களை போல, இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வழிவகை செய்யும் “தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், கல்வியை தனியார்மயமாக்கும் முடிவை எடுத்திருப்பது பெரும் பேசுபொருளாகி இருக்கும் என…

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 19 மார்ச் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். கடுமையான மின் கட்டண உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி  கூலியை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும்…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று நடனமாடிய துணை ராணுவப் படைகள்
– சோனி சோரி

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் செயற்பாட்டாளர் சோனி சோரி, இந்திய அரசு உள்நாட்டின் சில பகுதிகளைக் காலனியாக்கிவரும் இரத்தக்களரி தோய்ந்த நிலத்தில் நிமிர்ந்து நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிமவளம் நிறைந்த காடுகளின் உரிமைக்காக பழங்குடியினருக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் நீண்ட, நெடிய மோதல்களை அவரது வாழ்க்கை உள்ளடக்கியிருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சோனி சோரியை மாவோயிஸ்ட் …

வங்கதேசத்து ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் ஸ்மார்ட் உற்பத்தி!

ஆயத்த ஆடைகள் (Readymade) தான் இன்று அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. வியட்நாம், கம்போடியா, வங்கதேசம், இந்தியா (குர்கான், திருப்பூர்), இலங்கை போன்ற நாடுகளில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயத்த ஆடைகளின் விற்பனைச்சந்தையை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பகாசுர நிறுவனங்கள் தான்; தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அமெரிக்க, …

சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவின்படி சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர்,…

கல்லறைக்கு அல்ல,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு
நடத்த வேண்டும் கரசேவை!

இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில் நடத்திய போராட்டத்தின் மூலம் நாக்பூரின் பல பகுதிகளில் கலவரத்தை அரங்கேற்றியுள்ளது.

இக்கலவரத்தில் வாகனங்களும், …