செங்கனல்

செங்கனல்

காசா – துப்பாக்கி முனையில் அமைதி

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான டிரம்பின் திட்டம் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் அரசும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கின்றன. காசாவில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனை இஸ்ரேல் நடைமுறைப்படுத்துவதை அமெரிக்க அதிபர் டிரம்பும் …

“பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” என்ற பெயரில் போர்வெறி கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டை திறந்து விட திட்டம்! உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் “விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து …

சதிக்கோட்பாடுகளுக்கு ( Conspiracy Theories) இரையாகும் நம்பிக்கையற்ற மக்களை மீட்க முடியுமா?

கரூரில் நடந்த தவெக-வினரின் தேர்தல் பரப்புரையின் போது 42 பேர் கொல்லப்பட்ட பெருந்துயரம் நடந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளிட்டார். அதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகளும், விஜய் இரசிகர்களும், பெலிக்ஸ் போன்ற “மூத்த பத்திரிக்கையாளர்களும்”, மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி போன்றவர்களும்…

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.    இது…

யூ.ஜி.சி.இன் புதிய பாடத்திட்டம்
வேதகால அனுமானங்களை அறிவியலாக்குவதற்கும் இந்து தேசவெறி பிரச்சாரத்திற்குமான மற்றொருக் கடவுச் சீட்டு

இந்தியாவில், படித்த இளைஞர்களுக்கு முறையான வேலையில்லை. இதன் அளவு ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாகும். அதாவது படித்த பாதிபேருக்கு தகுதியான வேலையில்லை. அதுவும் இளங்கலை அறிவியல் மற்றும் கலை சார்ந்த படிப்பு படித்தவர்களாக இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏதாவது சொந்த தொழில்தான் பார்க்கவேண்டும். அக்குறையை போக்கி, பஞ்சாங்கம் பார்ப்பது, கல்யாணம், காதுகுத்து மற்றும் கருமாதிக்கு …

ஏழுமலையான் யாருக்கு?

இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளில் முன்னணியுள்ள அதானியைப் போல, கார்ப்பரேட் சாமிகளில் முன்னணியான செல்வச் செழிப்புள்ள ஏழுமலையானுக்கும் கோடிக்கணக்கில் பணம் காணிக்கையாகக் கொட்டப்படுகிறது. அப்படி, உண்டியலில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கானப் பணத்தில் 100 கோடி மதிப்புள்ள அந்நியக் கரன்சியை ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் களவாடியுள்ளனர் ஏழுமலையான் ஊழியர்கள் இருவர். திருடிய அந்நியக் கரன்சியைப் பிளாஸ்டிக் கவரில் அடைத்து தனது…

விஜயை கைது செய்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம் !

கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் ! இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை 11 மணிக்கு புரட்சிகர மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்…

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

இத்திட்டத்தை நான்கு இணைத் திட்டங்களாக மோடி அரசு செயல்படுத்தப்போகிறது. முதலாவதாக கிரேட் …

விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அந்தக் காணொளியில் அவர் கூறியிருக்கிறார். ஆம் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் …

கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 28-09-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.…