செங்கனல்

செங்கனல்

கூட்டணி பேரம் பேசவே வன்னியர் சாதி
இளைஞர்கள் மாநாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வன்னிய சாதி இளைஞர்கள் மாநாடு, கடந்த ஞாயிறு அன்று மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் நடைபெற்றது. இம்மாநாட்டை, அப்பா ராமதாசும், பிள்ளை அன்புமணியும் கூட்டாகத் தலைமையேற்று குடும்பம் மற்றும் சாதி சனங்களோடு நடத்தி முடித்துள்ளனர்.

மாநாடு முடிந்த பிறகு அங்கு குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் அன்புமணி ராமதாஸ் தனது நிர்வாகிகளுடன் …

மாணவர்களை இழிவுபடுத்தும் நீட் தேர்வு தேவையா?

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே ஒரு பெண் போலீசு, மாணவிக்கு வேறு சட்டை வாங்கிக் கொடுத்து தேர்வெழுத உதவியது,…

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த கோரத் தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் காவு கொண்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலை நிகழ்த்தி …

ஆபரேசன் காகரை நிறுத்து!

ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின் நோக்கம். இதனை அம்பலப்படுத்துகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் புவன்.  …

இந்து மதவெறிக்கும் தீவிரவாத தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?

பஹல்காம் தாக்குதல் இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் எதிர் விளைவே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று நாம் சொல்கிறோம்.  அது எவ்வாறு என்று விளக்குகிறது இந்தக் காணொளி.   பாருங்கள் ! பகிருங்கள் ! விமர்சியுங்கள் !     …

திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களுக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டதன்…

அமெரிக்க எஜமானரின் உத்தரவையடுத்து முடிவுக்கு வந்தது “தேச பக்திப் போர்”

குலைக்கும் நாயின் வீரமெல்லாம் அது கட்டப்பட்ட கயிற்றின் நீளத்திற்குத்தான் என்று கூறுவார்கள். அதுபோல கடந்த ஒரு மாதமாக போர் போர் என கூச்சலிட்டுவந்த காவிக் கும்பலின் வீரமெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னால் மண்டியிட்டுப் படுத்தேவிட்டது.

போர் நிறுத்தம் குறித்து இந்தியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, “இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு …

போலி தேசிய போர்வெறியைப் பரப்பும் காவி கும்பல்!

‘தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக,  பஹல்காம் தாக்குதலை அடுத்து மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தேசப்பாதுகாப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து தேசிய வெறியைப் பிரச்சாரம் செய்துவருகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாகுதலுக்கு இந்தியா பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் (we want revenge) என்ற ஹேஸ்டேக்குகளோடு மோடிக்கு …

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இன்றைய…

நான் கற்றறிந்த மார்க்ஸ்

நாம் ஒரு படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். படத்தில் வரும் கதாபாத்திரம் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்க்கும் போதோ, அநியாயத்தை எதிர்க்கும் போதோ  நாம் அதிகமாக ரசிக்கிறோம்.  நிஜத்தில் செய்ய முடியாது என்று நாம் நினைக்கும் ஒன்றை ஒரு கதாபாத்திரம் செய்யும் போது நன்றாக இருக்கிறது. சரி நிஜத்தில் ஏன் செய்ய முடியவில்லை…