செங்கனல்

செங்கனல்

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தலேவாலின் நெஞ்சை உலுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நீலி கண்ணீர் வடிக்கும் உச்சநீதிமன்றமும்!

  விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து உண்ணாமல் போராடி வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து…

மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!

புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. மனேசர் ஜெனரல் மஸ்தூர் தொழிலாளர்…

மன்மோகன் சிங் : சீர்திருத்தங்களின் சிற்பியா? ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து அவருக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஒருவழியாக நினைவஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தி முடித்திருக்கிறார்கள். இறந்தவர்களின் தவறுகளைப் பற்றிப் பேசக் கூடாது என்ற இத்துப்போன சம்பிரதாயத்திற்கு இணங்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சி என எல்லா தரப்பும் மன்மோகன் சிங்கை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். தமிழ்நாட்டு ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல விஜயகாந்தை …

இந்துக்களின் எதிரி யார்? – தோழர் பாலன் உரை

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள்  மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர் அணுகுமுறை என்பது உச்சிகுடுமிமன்ற நீதிபதிகளையே கோபம் கொள்ளவைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

யோகியினுடைய இந்துத்துவா …

டங்ஸ்டன் சுரங்கம் 50 கிராமங்களை அழிக்கத் துடிக்கும் வேதாந்தா | தோழர் விடுதலை குமரன் |

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் விடுதலை குமரன் அவர்கள் ஆற்றிய உரை… …

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக ஒன்றிய அரசுடன் முரண்படுவது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்து கொண்டிருப்பதோ …

ஊழலின் ஊற்றுக்கண் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளித்துவமே!

உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது. ‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், ஊழலை ஒழிக்கப் போவதாக சவடால் அடித்த, அரவிந்த்…

மக்களுக்கு வரிச்சுமை முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி!

இரு வாரங்களுக்கு முன்பு 55வது ஜிஎஸ்டி குழு கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெரியளவு எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களுக்கான வரி மாற்றங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், கார்கள், பாப்கார்ன் ஆகியவற்றின் மீதான வரியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர். இதைவைத்து …