செங்கனல்

செங்கனல்

போலி தேசிய போர்வெறியைப் பரப்பும் காவி கும்பல்!

‘தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக,  பஹல்காம் தாக்குதலை அடுத்து மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தேசப்பாதுகாப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து தேசிய வெறியைப் பிரச்சாரம் செய்துவருகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாகுதலுக்கு இந்தியா பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் (we want revenge) என்ற ஹேஸ்டேக்குகளோடு மோடிக்கு …

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இன்றைய…

நான் கற்றறிந்த மார்க்ஸ்

நாம் ஒரு படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். படத்தில் வரும் கதாபாத்திரம் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்க்கும் போதோ, அநியாயத்தை எதிர்க்கும் போதோ  நாம் அதிகமாக ரசிக்கிறோம்.  நிஜத்தில் செய்ய முடியாது என்று நாம் நினைக்கும் ஒன்றை ஒரு கதாபாத்திரம் செய்யும் போது நன்றாக இருக்கிறது. சரி நிஜத்தில் ஏன் செய்ய முடியவில்லை…

காவி பாசிஸ்டுகளின் போலி தேசிய வெறிக்கு ஒத்தூதும் எதிர்க்கட்சிகள்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், அதுவும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது, அது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, மதவெறியையும், போலி தேசிய வெறியையும் தூண்டிவிடும் வகையில் காவி பாசிச சக்திகள் அரை உண்மையை முழுப்பொய்யாகப் பிரச்சாரம் செய்கின்றனர். இவை …

சாதிவாரி கணக்கெடுப்பு சாதிய இருத்தலுக்குத் தான் வழிவகுக்குமே ஒழிய, சாதியை ஒருபோதும் ஒழிக்காது

1947-போலி சுதந்திரத்தைத் தொடர்ந்து தன்னைக் குடியரசாக அறிவித்துக்கொண்ட அன்றைய ஒன்றிய அரசு “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பைக் கைவிட்டது. சாதி-மத ரீதியான பிரிவினை-வெறுப்பு அரசியலை விதைத்து வரும் பாசிச மோடி அரசோ, “குடிமக்கள் அனைவரும் சமம்” என்கின்ற கருத்தளவிலான சமத்துவத்தைக்கூட விட்டுவைக்க மனம் ஒப்பவில்லை. பிரிவினை-வெறுப்பு அரசியலைத் தொடர்ந்து விதைக்க வழிவகுக்கும்…

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கரின் அவதூறுகள் | அம்பலப்படுத்தும் தோழர் புவன்

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கரின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் புவன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!    …

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: காவி பாசிசம், அரசு பயங்கரவாத தாக்குதலின் எதிர்வினை!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியன்று மதியம் 2:30 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்காகச் சென்ற பயணிகளின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றும்; பத்துக்கும் மேற்பட்டவர்களைப் படுகாயமடையச் செய்தும் முஸ்லீம் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்ப்பதை …

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் டிரம்ப் அரசு

டிரம்ப் நிர்வாகம் விதித்த ஜனநாயக விரோதமான 10 விதிகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏற்காததால் 2.2 பில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளது, டிரம்ப் அரசு. அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மிகப் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். பல நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் மருத்துவம், பொறியியல், …

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது…

பாஜக அதிமுக கூட்டணி ஒரு வரலாற்றுப் பிழை! உழைக்கும் வர்க்கக் கூட்டணியால் மாற்றியமைப்போம்!

எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் பேச வேண்டும் என்கிற மூன்று நிபந்தனைகளை முன்வைத்து பேசியுள்ளார். தமிழக சந்திப்பின் போதும்,…