செங்கனல்

செங்கனல்

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

 

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள இராமபத்ராசார்யா என்ற இந்து மதகுருவின் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். முழுமையான …

வறுமையையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்!

ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து,  பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக திருவாய் மலர்ந்துள்ளார். சொந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதாகக் கூறுவதும், பாகிஸ்தான் இந்தியாவை வெறுப்பதாக்…

இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து அழிப்பது வரை இந்தியா எடுத்துள்ள …

இந்தியா என்ன தர்ம சத்திரமா?
நீதிபதிகளின் வாய்கொழுப்பு!

ஈழத்தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்கிற காரணத்தால், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 2018-ம் ஆண்டு 10 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார். இதற்கிடையில் அவருடைய தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இந்தியாவை விட்டு உடனடியாக…

பஹல்காம் தாக்குதல் : 
நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!  
பிரச்சார வெளியீடு 

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே!  பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன. மோடி அரசை விமர்சிப்பவர்கள் கூட “பாதுகாப்புக் குறைபாடு, அரசின் தோல்வி” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மாறாக, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அடிப்படை குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவோ…

தங்க நகைக்கடன் தொடர்பான RBI-யின் புதிய வரைவு விதிகள்: மக்கள் மீது தொடுத்திருக்கும் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது முறைகேடுகளைச் செய்யும் வங்கி ஊழியர்களை தண்டிப்பதற்குப் பதிலாக…

கனிமவளக் கொள்ளை:
மறுகாலனியாதிக்கத்தின் கீழ் வேட்டைக்காடாகும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள்!

இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிமவளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு எதிராகப் பழங்குடி மக்களும், மாவோயிஸ்ட்டுகளும் போராடி வருகிறார்கள். போராடுகின்ற அம்மக்களையும், மாவோயிஸ்ட்டுகளையும் விரட்டியடிப்பதற்காக இந்திய அரசு, ஆபரேசன் காகர் எனும் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. ஆபரேசன் காகரின் நோக்கம் குறித்து அமித்ஷா கூறும் போது  நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பகுதியை …

பேச்சுவார்த்தைக்கு அழைத்து மூச்சை நிறுத்தியது வீரமா? || அறம் இணைய இதழ்

கருத்தாடல் பக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் ) யின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜின் படுகொலையை அடுத்து அறம் இணைய இதழில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு

 

 

ஏப்ரல் 22. க்குப்பிறகு அரவமில்லாமல் ஒடுங்கியிருந்த உள்துறை அமைச்சர் அமீத் ஷா நேற்று X பதிவேட்டில், “நக்சலிசத்தை முறியடிக்கும் போரில் இன்று முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. …

ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா?
அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக 13-05-2025 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்”…

பொள்ளாச்சி வழக்கு: நீதிமன்றங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுத்திட முடியமா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஒன்பது பேருக்கும் அபராதத்துடன், சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்த திமுக அரசாங்கம் உதவியது, அதனாலேயே குற்றவாளிகள் …