செங்கனல்

செங்கனல்

உமர் – இமாம் பிணை மறுப்பு: காவி பாசிஸ்ட்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் உச்சநீதி மன்றம்

நீதித்துறை ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின், காவி அரசியல் திட்டத்திற்கான எடுபிடிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நீதிமன்றங்களின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகள். ஒன்று, குற்றம் நிறுபிக்கப்படாத உமர் காலித் மற்றும் ஜர்ஜீல் இமாமிற்கு உச்சநீதிமன்றம் பிணை மறுத்த தீர்ப்பு. மற்றொன்று, பாலியல் வல்லுரவு மற்றும் கொலைக்குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தேரே சச்சா சௌதா-வின் குர்மீத் ராம் ரஹீம் சிங் …

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழ்

செங்கனல் ஜனவரி – பிப்ரவரி 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: பாசிச எதிர்ப்பு முகமூடியில் தி.மு.க.வின் ஆளும் வர்க்க அரசியல்  இடம்பெறும் கட்டுரைகள்: அட்டைப் படக் கட்டுரை:  ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு…

இலத்தீன் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிறுவ வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா

சமீபத்தில் வெனிசுலா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க இராணுவம் அந்நாட்டு அதிபர் மாதுரோவை கடத்தி அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. வெனிசுலா தலைநகர் காரகாசிற்குள் ஊடுருவிய அமெரிக்க படையினர் அந்நகரின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாக அந்நகர் முழுவதும் குண்டுவீசித் தாக்கியிருக்கின்றனர். அதன் பிறகு அந்நாட்டு அதிபர் மாதுரோ தங்கியிருந்த …

வென்றது வழக்கறிஞர் போராட்டம்!
 பின்வாங்கியது  உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ இது நாள் வரை  அமுல்படுத்தப்படாத கட்டாய ஈ பைலிங் தமிழக விசாரணை நீதிமன்றங்களில் திணிக்கப்பட்டுள்ளது,  இதை திரும்ப பெற வலியுறுத்தி JAAC (தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு)  தலைமையில்  கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் மனித சங்கிலி என்று…

உன்னாவ் : காவி பாசிஸ்டுகளுக்காக அகலத் திறக்கும் நீதிமன்றக் கதவுகள்

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு, அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் இந்து மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2008ல் அந்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பில்கிஸ்…

காவிக் குண்டர்களின் கொடூர குற்றங்களை “சமூக நல்லிணக்கத்திற்காக” ஏற்றுக் கொள்ளச் சொல்லும் யோகி அரசு

எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த மனுவில்தான் இதுபோலக் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் கொல்லப்பட்ட …

காசாவின் இளம் தலைமுறையினரின் கல்விக்காகப் போராடும் ஒரு ஆசிரியரின் அனுபவம்!

இஸ்ரேல் இனவெறி அரசு, காசாவில் நடத்திவரும் இனப்படுகொலையால் அங்குள்ள இளம் தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாக மாறிவருகிறது. இஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், டிரோன்களும் காசாவிலுள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் என கல்வி பயிலுவதற்கான அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளன. இது மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட பாசிச நடவடிக்கயின் மூலம் அங்கு…

VB-G RAM-G சட்டம்: முதலாளிகளின் நலனுக்காக ஒழித்துக் கட்டப்பட்ட நூறுநாள் வேலை திட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு சாவு மணி அடித்திறுக்கிறது மோடி கும்பல். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, முதலாளிகளின் நலன்களுக்கான, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக, தற்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை திட்டத்திற்கும் கொள்ளி வைத்திருக்கிறது இந்த பாசிச கும்பல்.

தனியார்மயக் கொள்கைகளின் விளைவால் இந்தியா கிராமப்புறங்களில் …

பா.ஜ.க பெறும் நன்கொடைகள் : கார்ப்பரேட் பாசிசத்தை நிறுவுவதற்கான சன்மானமே!

நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறிவிட்டதாகக் கூறி வேட்பாளர்கள், ஓட்டுக் கட்சி ஆதரவாளர்களிடம் பணம் பறி முதல் செய்வது, இதற்கான வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் மூலம் இந்திய தேர்தல் ஜனநாயகம் ஏதோ நேர்மையாக நடத்தப்படுவது போல மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.

ஆனால் இதே தேர்தல் ஆணையம் …

தேசிய புலனாய்வு முகமையின் அடாவடித்தனமும் மோடி-அமித்ஷா கும்பலின் பெருமிதமும்!

இந்தியாவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான என்ஐஏ குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் 21, 2025 அன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்” தனது அரசாங்கம் பல சாதனைளைப் புரிந்துள்ளதாக வெற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அதில் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குகள் பதிவு செய்வதிலும், நீதிமன்றங்களில் தண்டனைகளைப் பெற்றுத் தருவதிலும்…