செங்கனல்

செங்கனல்

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

  பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம்…

கன்வார் யாத்திரை : பக்தியை மதக்கலவரமாக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார், கங்கோத்ரி, கோமுகி மற்றும் கேதார்நாத் புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்தக்…

மோடியின் மக்கள் விரோதக் கொள்கைகளும்,
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தமும்!

அகில இந்திய அளவில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அவர் சட்டைச் செய்யவில்லை என்பதால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி மோடி அரசின் தொழிலாளர் – விவசாய விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து…

போலீஸ் உங்கள் நண்பனா?
புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை

“போலீசை திருத்த முடியுமா?” திருபுவனம் கொட்டடிக் கொலையை ஒட்டி தற்போது இந்தக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக மக்களின் மீது பாய்ந்து பிடுங்குவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள போலீசை என்றைக்கும் திருத்த முடியாது. அதற்கு ரத்த சாட்சியாக இந்தியாவின் சமீபத்திய வரலாற்றிலேயே பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. அந்த வகையில் 1989 நவம்பர்…

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

 

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார் கொட்டடிக் கொலை குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது. ஐந்து போலீசார் மீது இந்தக் …

கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க PLI, சம்பளம் கொடுக்க ELI

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஊக்கத்தொகை (Employment Linked Incentive-ELI) என்ற திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதல் முறையாக EPFO-வில் பதியும் ஒரு தொழிலாளிக்கு ஊக்கத்தொகையாக அவருடைய முதல் மாத சம்பளத்தை (அதிகபட்சமாக 15000 ரூபாய் வரை) இரண்டு தவணையில் கொடுக்கப்படும்.

வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு ஊக்கத்தொகையாக ஒரு தொழிலாளிக்கு …

இரயில் கட்டண உயர்வு: மோடி அரசின் அடுத்த இடி!

“நான் நாட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரயில்வே யாரும் கற்பனை செய்திருக்க முடியாத மாற்றத்தைக் காணப்போகிறது” என்று, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்ததொரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மோடி. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் தவிர வேறெந்த பெரிய மாற்றமும் இந்த …

பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன், அணில் மற்றும் சேவல் என்கிற பல்வேறு பெயர்களில் உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் விநியோகிக்கப்பட்டு…

ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் – கார்ப்பரேட் சேவையில் மோடியுடன் போட்டி போடும் காங்கிரஸ், தெலுங்குதேசம்

நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர்.

ஒரு நாளின் அதிகபட்ச வேலை நேரம் 9 மணி நேரத்திலிருந்து

பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் பலர் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’…