செங்கனல்

செங்கனல்

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் பாஜக ஆதரவு பேச்சாளர்கள், சமூக ஊடகக் கையாட்கள் வரை அனைவரும் மோடி அரசின் …

சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டைத் திணித்து நீட் தேர்வை நிரந்தரமாக்கி…

GST வரி குறைப்பு: மக்கள் மீதான அக்கறையா? அல்லது உள்நாட்டுத் தேவை தேக்கநிலை காரணமா?

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற மூன்று வரி அடுக்குகளாக மாற்றியுள்ளனர். மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு (400 பொருட்கள்) நிர்ணயிக்கப்பட்டிருந்த …

தேர்தலைப் புறக்கணியுங்கள், பா.ஜ.க.வைத் தெருவில் வீழ்த்துங்கள்! – பரகலா பிரபாகர்

இன்று ஹைதராபாதில் இருந்து விமானத்தில் என்னுடன் பயணித்த சகபயணி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “பாருங்கள் பரகலா, நீங்கள் ஒரு முக்கியமான விசயத்தைத் தவறவிடுகிறீர்கள். பாஜக-வின் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பாஜக-வுக்கு வெவ்வேறு அணிகள் உள்ளன. அவை ‘மோர்சாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பாரதீய ஜன யுவ மோர்சா (இளைஞர் அணி), மகளிர் அணி, விவசாயிகள் அணி, …

பீகார் : திசை மாறுகிறதா சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்?

பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர திருத்தம்” (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து “வாக்கு அதிகாரத்திற்கான யாத்திரை” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் இணைந்து தொடர்ந்து பேரணியும், …

உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை ஏற்படுத்திய பிறகு, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் …

அறிவியலுக்குப் புறம்பாக இந்து தேசவெறியை
மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்

நிலவுக்கு முதலில் சென்றது யார்? என்று கேட்டால் நீல் ஆம்ஸ்ட்ராங்  என்று பள்ளி குழந்தைகள் கூட சொல்லும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எட்டு வருடத்திற்கு முன்பே வின்வெளியில் பயணம் செய்தவர் அப்போதைய இரஷ்யாவின் யுரி ககரின். இது உலகம் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜகவினரைப் பொருத்தவரை இது பாரத பெருமையை மறைப்பதற்காக மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி. …

பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

  இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை ஆகிய…

தர்மஸ்தலா : புகாரளித்தவரைக் கைது செய்து, மாபியா கும்பலைக் காப்பாற்ற துடிக்கும் ஆளூம்வர்க்கம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி, கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில், கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.…