செங்கனல்

செங்கனல்

கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையதாகும். எந்த நாடும், தான் எவ்வளவு தடுப்பூசிகளை …

ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்து விட்டது ‘நீட்’;
பட்டப்படிப்பையும் புதைக்க வருகிறது ‘கியூட்’..!

 

பள்ளிப்படிப்பை முடித்து ஆயிரம் கனவுகளோடு, கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் எதிர்காலங்களான மாணவ – மாணவிகள். இவர்களில் குறிப்பாக கிராமப்புற – நகர்ப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட – மாணவ – மாணவிகளின் எதிர்காலமானது கலை – அறிவியல் கல்லூரிகளில்தான் விதைக்கப்படுகிறது.

இவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்து தற்குறிகளாக்கும் நோக்கத்தில் பாசிச மோடி அரசால் …

காவிகளின் இந்துராஷ்டிரத்தில் பெண்கள் வெறும் பொம்மைகளாக, உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா?

பெண்களை நதியாக, இயற்கையாக, தெய்வமாக வழிபடுகிறோம் என என்னதான் காவிகள் கதையளந்தாலும் அவை அனைத்துமே மேடையில் அவர்கள் போடும் நாடகம் மட்டுமே என்பதை அவர்களது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும். காவி பாசிஸ்டுகளின் கருத்தியல் அடிப்படையான சனாதன தர்மம் என்பது சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல பெண்களுக்கும் எதிரானதுதான். இந்து மதத்தின் புனித நூலாக காவிகள் முன்னிறுத்தும் பகவத் …

இந்துத்துவ கொள்கைக்கு ஏற்ப ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம்.

 

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராமானுஜம் கல்லூரி, மத்திய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் கற்றல் மற்றும் கற்பித்தல் மையமாக செயல்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் மையமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் “Shrimad Bhagavad Gita: Enlightenment and Relevance” …

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அப்போதைய தென்மண்டல…

டங்கி பாதை பயணமும் – காவிகளின் ‘விஸ்வகுரு’ பஜனையும்

மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சி குறித்தும், மோடி ஆட்சித் தலைமை ஏற்ற பிறகு உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமை குறித்தும் காவிகள் உருவாக்கி வரும் பிம்பம் மிகப் பெரியது. இணையவெளியில் காவிகள் நடத்தும் கதா காலட்சேபங்களில் அமெரிக்க அதிபர் பிடனும், ரஷ்ய அதிபர் புடினும் மோடியின் ஆலோசனையைக் கேட்டே இயங்குகின்றனர். உலக அரசியலே மோடியின் …

பெரியார் பல்கலைக் கழக ஊழல் துணை வேந்தரைப் பாதுகாக்க துடிக்கும் காவிக் கும்பல்

 

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த செவ்வாய் கிழமை அன்று கருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தால் ஏழு நாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அவருடைய வீடு, அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் (பியூஇயு) சட்ட ஆலோசகர் ஐ.இளங்கோவன் அளித்த …

நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்றம் இல்லையில்லை ‘காவி – கார்ப்பரேட்டுகளின் மன்றத்தில்’ ஜனநாயகம் இல்லை; ஜனநாயகம் இல்லை; என்று ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இதர எதிர்க் கட்சிகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு, கேட்டு காது புளித்துப் போனதை எவராலும் மறுக்க முடியாது.

அதே வேளையில், புலம்பிக் கொண்டு இராமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் …

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
பாசிசத்தின் தாக்குதலைக் கண்டு புலம்பும் எதிர்க்கட்சிகள்.

 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 522 உறுப்பினர்களைக் கொண்ட மக்களைவையில் இருந்து நூறு எம்.பி.க்களும், 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு …