செங்கனல்

செங்கனல்

இந்தியப் புரட்சியின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிய தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதனுக்கு சிவப்பஞ்சலி

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் தோன்றிய வலது, இடது சந்தர்ப்பவாதங்களைத் திரைகிழித்து உதித்தெழுந்த மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ)-வை நிறுவி அதற்கு, அரசியல்-சித்தாந்த ரீதியாகத் தலைமையளித்தவர்களில் முதன்மையானவராகவும் அணிவேராகவும் திகழ்ந்த, நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதன் 17.06.2024 அன்று வயதுமூப்பு, உடல்நலப் …

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி கவர்னர் வி. கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி (Committee for releasing Political Prisoner’s) 2010 அக்டோபரில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த  காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர் …

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலி! சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி என்ற முழக்கத்துடன்  தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 அன்று காலை 11.00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் விசச்சாராய மரணங்களுக்கு காரணமான அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள்…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி
போலிசையும் அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்காமல்,
கள்ளச்சாராய மரணங்கள் ஒழியாது!

புரட்சிகர மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 21-06-2024  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசச்சாராயத்திற்கு சாதாரண ஏழை எளிய உழைக்கும் மக்கள் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் இறந்து பல குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான…

இந்தியாவில் அதிகரித்துவரும் ஏற்றதாழ்வு:
தாமஸ் பிக்கெட்டி vs ரகுராம் ராஜன்
முட்டுச் சந்தில் நின்று சண்டையிடும் முதலாளித்துவவாதிகள்!

    அண்மையில் தாமஸ் பிக்கெட்டி என்ற பிரபல பொருளாதார நிபுணர், “இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க ஒரு செல்வ வரி தொகுப்புக்கான முன்மொழிவுகள்” (‘Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India’) என்ற ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் உள்ள ஏற்றதாழ்வு…

டிரம்பை ஆதரிக்கும் வால்ஸ்டிரீட்
நிதிமூலதனச் சூதாடிகள்

அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் இச்சாதனைக்குச் சொந்தக்காரர். ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக தனது நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு செய்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டு …

பாசிசத்தை வீழ்த்த :
தேர்தல் மாயையை புறக்கணிப்போம்!
பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

  நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்கிற முழக்கத்தை முன்வைத்து, பிரச்சாரத்தை முன்னெடுத்து வென்றன, திமுகவும், இந்தியா கூட்டணியும். நாடு தமதாகவில்லையென்றாலும், தமிழகத்தில் 40-தையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியெடுத்து தமதாக்கிக் கொண்டன. இதையே பாசிசத்திற்கெதிரான பெரும் வெற்றி எனக் கொண்டாடி வருகின்றன. ஆனால் இவை கூட அதிமுக, பாஜகவுடன்…

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

 

 

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் இதற்காக தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் …

கங்கனா ரனாவத் கன்னத்தில் விழுந்த அறை : குல்விந்தர் கவுர் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்!

 

 

“100 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பெண்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்று கங்கனா சொன்னார். என் அம்மாவும் அந்த போராட்டத்தில்தான் இருந்தார்”

  • குல்விந்தர் கவுர் (கங்கனா ரனாவத்தைக் கன்னத்தில் அறைந்தவர்)

சண்டிகர் விமான நிலையத்தில் குலவிந்தர் கவுர் என்னும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காவலர், ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் நாடாளுமன்ற …

பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான அபாயம் நெருங்குகிறது!

 

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாசிச மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனப் பிரச்சாரம் செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவு தொகுதிகளில் கூட வெற்றி …