செங்கனல்

செங்கனல்

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் : மோடியையே அசரவைக்கும் திராவிட மாடலின் தனியார்மயம்!

தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளையும், சுயநிதிக் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு ஏற்றவகையில் பழையச் சட்டத்தில் சில …

கிட்னியை விற்பதுதான் வளர்ச்சியா?

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்குச் சிறுநீரக வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ஆம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் …

நக்சல்பாரி இயக்கத்தின் வீழ்ச்சி என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் மூடநம்பிக்கையே!

சமீபத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட  மாவோயிஸ்ட்டுகள் சட்டீஸ்கரிலும், மகாராஷ்டிராவிலும் சரணடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரான மல்லுஜூலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி, 60 மாவோயிஸ்டுகளுடன் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார்.  இப்படி இவர்கள் தானாகவே முன்வந்து சரணடைந்திருப்பது மாவோயிஸ்ட்டுகளின் இயக்கத்தை பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.…

காவி பாசிச ஆதரவாளர்களுக்குப் பிணை,
ஜனநாயக சக்திகளுக்குச் சிறை
உச்சநீதிமன்றத்தின் பாசிசப் பாசம்

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பலரும் நீதித்துறையையே தங்களது புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிச சக்திகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியும் என அவர்கள் மக்களை நம்பவைக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி தற்போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் …

உழைப்புச் சுரண்டல் எனும் இருட்டின் மீது எழுப்பப்பட்டிருக்கும் “தீப ஒளியின்” கொண்டாட்டம்

“விளக்குகளின் பண்டிகை” என தீபாவளியை மக்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவின் பட்டாசுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கை (80%) உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டின் பட்டாசு மையமான சிவகாசியின் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை எனும் விளக்கு என்றைக்கு அணைந்து போகுமோ என்ற அச்சத்துடன், இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களின் அயராத …

விஜயை நம்பி ஏமாறியதாக கதையளக்கும்
”மூத்த” பத்திரிக்கையாளர்கள்.

“மூத்த” பத்திரிக்கையாளர்கள் என அழைக்கப்படும் மணி மற்றும் எஸ்.பி இலட்சுமணன் ஆகிய இருவரும் தவெக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்பு, கரூர் துயரச்சம்பவத்திற்கு பின்பு என இரண்டாகப் பிரித்துள்ளனர்.

நடிகர் விஜய் ”அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்” என்று மணியும், ”தமிழ்நாடு அரசியலுக்கு இலாயக்கில்லை” என்று எஸ்.பி. இலட்சுமணனும் மிகக்கடுமையாக …

பஞ்சாப் பெருவெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஆளும் வர்க்கம் உருவாக்கிய பேரிடர்!

கடந்த ஆகஸ்ட் மாதம் தானிய உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்க நேர்ந்தது. அளவுக்கு அதிகமாகக் கொட்டித்தீர்த்த தென்மேற்குப் பருவ மழையால் உருவான இப்பெருவெள்ளமானது பஞ்சாப் மட்டுமல்லாமல் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, இமாச்சல பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களிலும் பெரும் பெருஞ்சேதத்தை உண்டாக்கியது.

மழைக்காலத்தில் வெள்ளம் வருவது பஞ்சாப் போன்ற …

ஐ.டி. ஊழியர்களின் வேலையிழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவா? ரிசர்வ் பட்டாளமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

செங்கனல் அக்டோபர் – நவம்பர் 2025 அச்சு இதழ்

செங்கனல் அக்டோபர் – நவம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: 2026 தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்! இடம்பெறும் கட்டுரைகள்:  சிறப்புக் கட்டுரை: ஓட்டுத் திருட்டு, சிறப்புத் தீவிர வாக்காளர் …

தொழிலாளர்களை பலி கேட்கும் மோடியின் பொருளாதார வளர்ச்சி!

இந்திய தொழிலாளர்களில் பெரும் பகுதி (45 கோடி) அமைப்பு சாரா தொழிலாளர்களே. இவர்களுக்கென்று  தொழில் பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ அல்லது தொழிலாளர் உரிமைகளோ எதுவும் கிடையாது. மோடி அமைச்சரவையின் கையாளாகதத்தனத்தினால் கொரானா காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்லனா துயரத்திற்கு ஆளாகினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில் டிக்கெட்டுக்கு பணமில்லாமல் பல நூறு கிலோமீட்டர் …