செங்கனல்

செங்கனல்

அணுசக்தி மசோதா : அமெரிக்காவின் இலாப வெறிக்கு அடிமை சேவகம் செய்யும் மோடி அரசு!

டிசம்பர் 2, 1984 அன்று போபாலிலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மெத்தில் ஐசோ சயனைட் வாயு 20,000 மக்களை படுகொலை செய்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அங்கு உயிருடன் இருக்கும் மக்களோ பிள்ளைகளை பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப் பிள்ளைகளை சுமந்தபடி, சுமார் 41 ஆண்டுகளாக நம் கண் முன்னே சாட்சிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.…

கிறிஸ்துமஸ் தாக்குதல்கள் :
கிறிஸ்தவர்களுக்கு எதிராக பழங்குடியினரைத் தூண்டிவிடும் காவி பாசிஸ்டுகள்

சத்திஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த எதிர்ப்பை முனை மழுங்கச் செய்வதற்கு இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு …

UGC கலைப்பு மசோதா – உயர்கல்வியில் அதிகார மையப்படுத்துலுக்கான காவி கும்பலின் செயல்திட்டம்!

கடந்த வாரம் திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி  அமைப்பு மசோதா (Viskit Bharath Shiksha Adhishthan – VBSA) விற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக பரிந்துரைத்திருக்கிறார் சபாநாயகர். அதிகார மையப்படுத்துதல், இந்துத்துவ திணிப்பு, கார்ப்பரேட்மயம் ஆகியவற்றுக்கான நிர்வாக ரீதியான கட்டமைப்பு மாற்றத்தை திணிப்பதற்காகவே இம்மசோதா …

பாராளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும்
காவி பாசிஸ்டுகள்

2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு சற்று முன்பாக, இந்திய நாடாளுமன்ற வாயில் படிக்கட்டில் விழுந்து வணங்கியதோடு நாடாளுமன்றத்தை ’ஜனநாயகத்தின் ஆலயம்’ என வர்ணித்தார். இது மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்பொழுது மோடி பிரதரமாக பொறுப்பேற்று பதினொரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் நாடாளுமன்றம் நடைபெறும் …

தமிழ்நாட்டில் கலவரமா?
புரட்சிகர மக்கள் அதிகாரம் பாடல்

வட வட வட நாட்டுல குழந்தை ராமரு…. நம்ம தமிழ்நாட்டுல கலவரத்துக்கு ஆண்டி முருகரு….. காவி பாசிஸ்டுகளின் கலவர முயற்சியை அம்பலப்படுத்தும் புரட்சிகர மக்கள் அதிகாரம் பாடல்    …

திருப்பரங்குன்ற தீப ஏற்பும்! நீதிமன்ற தீர்ப்பும்!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது ஒவ்வொரு வருடமும் நடந்தேறும் ஒன்று. இந்த நடவடிக்கையையொட்டி இந்து மதவெறி அமைப்பின் இராம.இரவிக்குமாரால்   வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து சனாதானவாதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியது குறித்து செய்திகள் ஒரு புறமிருக்க, மறுபுறம் தீபம் ஏற்றும் வழக்கமான இடத்தை மாற்றிக்  கோருவதற்கான உண்மையான…

இண்டிகோ வைத்த ஆப்பும்!
இணங்கிப் போன மோடி அரசும்!

இந்திய அளவில் விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம், விமானிகள் பற்றாக்குறையை செயற்கையான நெருக்கடிக்கு உள்ளாக்கி 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி விட்டது. இதனால், விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு காரணம், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்த விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளை (FDTL) இண்டிகோ…

தேர்தல் நன்கொடை: டாடா, பாஜகவிற்கு 
கொடுத்துள்ள லஞ்சம்!

முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக உள்ளவை. அவை, சுரண்டும் முதலாளித்துவ கொடூரர்களுக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கும் பொதுவானவர்கள், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று முகமூடி அணிந்து கொண்டு, மக்களின் உழைப்பை – சேமிப்பை அபகரித்து முதலாளிகளுக்குக்  கொடுப்பதும், நியாயம், உரிமை என்று போராடும் மக்களை ஒடுக்குவதையும் தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவை.…

சீரான, ஏற்றத்தாழ்வுகளற்ற, தடையற்ற இணைய வசதியும், தடையற்ற மின்சாரமும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா?

  தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற, ஒழுங்கற்ற, போதிய வேகமின்றி ஏற்றத்தாழ்வான இணைய வசதி உள்ள நமது நாட்டில், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும்  சீரான, போதிய வேகத்துடன், தடையின்றி இணைய வசதியை உச்சநீதிமன்றத்தாலும் உயர்நீதிமன்றத்தாலும் செய்து கொடுக்க இயலாது. அதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது,…

புல்டோசர் ஆட்சியை விரிவுபடுத்தும்
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்!

சமீபத்தில் நடந்து முடித்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இது இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி தேசகூ-வை வீழ்த்தி வெற்றிபெறும் என்ற ஆருடங்களை தவிடுபொடியாக்கியுள்ளது. பீகார் தேர்தலில் காவி பாசிச கூட்டணிக்…