செங்கனல்

செங்கனல்

ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

இன்று (செப்டம்பர் 2), ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களின் 55வது நினைவு தினம். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, துண்டாடப்பட்டுக் கிடந்த, மிகவும் பின் தங்கிய ஏழை நாடான வியட்நாமை ஒன்றினைத்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என மூன்று ஏகாதிபத்தியங்கள் அடுத்தடுத்து தொடுத்த ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்த்து நின்று முறியடித்த…

குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்

குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து இரண்டு வருடங்களான பிறகும், காங்கோவிற்கு மட்டுமல்லாது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அதன் அண்டை …

சாமியார் ராம் ரஹீமுக்கு சிறை தண்டணையிலிருந்து விடுப்பு – பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக

  மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறது பாஜக. இதுவே…

ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக நடைபெறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்!

மின் துறையை  மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்து கட்டுவதற்காக மோடி அரசு, மின்சார சட்ட திருத்த மசோதா 2022 என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளை போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அவர்கள் பகற்கொள்ளை அடிப்பதற்காக  மின்பயன்பாட்டை துல்லியமாக அளவிடும் …

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். 

இந்த பயணம் “வெகுசிரத்தையாக, நுணுக்கமாக, ராஜதந்திரமாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்” காவிக் கும்பலின் சமூக …

தேர்தல் ஆணையம்: பாஜக-வின் மற்றொரு நிர்வாகப் பிரிவு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளி அன்று அறிவித்தது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கானத் (செப்டம்பர் 18 மற்றும் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் காஷ்மீருக்கும்; அக்டோபர் 1 அன்று …

ஆணாதிக்கத் திமிரையும், ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் ஒழிக்காமல், பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் தீர்வு இல்லை!

எமதருமை மருத்துவ மாணவர்களே, கல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் மீது, பாலியல் வன்கொடுமை நடத்தி, அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொடூரமான முறையில் கொன்றது, வெறிப்பிடித்த மிருகச் செயல் என்பதோடு, இவை, நிர்பயாவோடு மட்டும் நிற்கவில்லை. இன்று வரை நீடிப்பதோடு, பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை என்பதே நிதர்சனம். இதை நடத்திய சஞ்சய்ராய் என்பவன், ஆண்ட்ராய்டு ஆபாச வீடியோக்களால் வெறியூட்டப்பட்டவன். இந்தக் …

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 4

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் தான் வளர்த்தெடுத்த கண்ணுர் படுகொலை மாதிரியை (model) – வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னர் அதில் தன் பாத்திரத்தை மறுத்துவிடும் அதேசமயம், பேச்சு வார்தைக்கு எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நபரைப் போலத் தோற்றமளிப்பதும்; போலிசுடன் நெருக்கமாக இருந்துகொண்டு வேலைசெய்வதும் என்ற மாதிரியை –  வல்சன் கேரள மாநிலம்…

மோடியின் ஆட்சியில் “சர்வம் அதானிக்கு அர்ப்பணம்”

“உடுக்கை இழந்தவன் கை போல” என உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுத்தார் திருவள்ளுவர். திருவள்ளுவராவது ஆபத்து வரும்போது உடனே உதவி செய்வதை நட்புக்கு இலக்கணமாக்கினார், ஆனால் மோடியோ தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு பிரச்சனை வரும் முன்னரே, எதிர்காலத்தில் நஷ்டம் வந்துவிடுமோ என்றஞ்சும் சூழல் ஏற்பட்ட உடனேயே ஓடோடிச் சென்று உதவி செய்ததன் மூலம் நட்புக்கு புது …

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம்
மோடியின் மற்றொரு பொய் பிரச்சாரம்!

“இன்று, இந்தியா ஒரு உணவு உபரி நாடாக உள்ளது. ஒரு கட்டத்தில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய கவலையாக இருந்தது, இன்று, உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது.” இது, சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விவசாயப் பொருளாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மோடி பேசியது.

இந்தியாவின் …