செங்கனல்

செங்கனல்

தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும்
பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!

 

 

 

மார்க்சிய-லெனினிய சொல்லாடல்கள் மூலம் தன் ‘வாதங்களை’ அடுக்கி, கேட்பவர்களையே ஒருகணம் திக்குமுக்காட வைத்துவிடும் ‘சொலல் வல்லனும்’ தி.மு.க.வின் ‘மார்க்சிய’ பிரச்சார பீரங்கியுமான திருவாளர் மருதையன், கடந்த 28.05.2023 அன்று ரூட்ஸ் தமிழ் யூடியூபுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். பாடகர் கோவன் ஏன் கள்ளச் சாராய சாவுகளை எதிர்த்துப் பாடவில்லை என்பது தொடர்பான பேட்டியான …

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

  மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!  ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!  டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மரணங்கள் அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் வெளிக்கொண்டுவருகின்றன.…

தேசிய கல்வி கொள்கை 2020
தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு ccce.eduall@gmail.com – 9444380211 16-05-2023 NEP–2020: தமிழ்நாடு அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து பேரா. ஜவகர் நேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பத்திரிக்கை செய்தியில் “இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டுள்ளதாலும், சில…

ஒரு ஐபோனிற்காக மரணித்தல் – Dying for an iphone – நூல் விமர்சனம்

2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தங்களது பணிநிலைமைகளையும், தங்குமிடம் உணவு ஆகியவற்றின் தரத்தையும் மேம்படுத்தக் கோரி பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலைப் பற்றி உலகத் தொழிலாளர்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டிய Dying for an iphone என்ற நூல் …

தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது
புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு!

நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை  ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு ஆகியவற்றை இயற்றி, அவற்றைச் சட்டமாக்க …

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை, ‘சிறப்புரிமையைக்’ காரணம் காட்டி, சமர்ப்பிக்க விரும்பவில்லை …

தீவிரமாகும் விவசாயிகளின் வறுமை! அம்பலமாகும் மோடியின் அண்டப்புளுகு!

விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவேன் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. ஆனால் இத்தனை ஆண்டுகால மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. மாறாக விவசாயிகளின் வறுமையும், கடனும் தான் இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயம் மூலம் பெறும் வருமானத்தை வைத்து கொண்டு, விவசாயிகள் கண்ணியமாகக் கூட வாழமுடியாமல் …

வேலைநேர சட்டத்திருத்தம்
தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் சீன மாடல் சுரண்டல்.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை திமுக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட திருத்தம் குறித்து சட்டசபையிலும், பொதுவெளியிலும் பேசிவரும் திமுக அமைச்சர்கள் “இது தொழிற்சாலைகளில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும்”, “தொழிலாளர் நலன் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்”, “தொழிலாளர் விரும்பினால் …

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என  சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி  தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள் எம்.எல்.எ மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிசத்…