செங்கனல்

செங்கனல்

ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!

ரேசன் கடைகளை மீண்டும் திற! புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசையை பெண்கள் முற்றுகை!

புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை. அரிசி, பருப்பு தொடங்கி பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் …

சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது…… ……..அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உணவு …

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்புவதற்கு வழியில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதுடன், மசோதா பிரச்சனையை தமிழக முதலமைச்சருடன் பேசித் தீருங்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

நிலுவையில் உள்ள …

உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி

இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.    …

பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும்
மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்!

தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய பரிந்துரைகளில் பிரதானமானது பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது. புதிய நிலைமைகளுக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று மோடி கும்பல் பொதுவெளியில் பேசி வந்தாலும் இந்து தேசிய வெறி கண்ணோட்டத்தை மாணவர்களிடம் ஆழமாக பதிய வைப்பதற்கான வாய்ப்பாகத்தான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இதனைக் கருதுகிறது. …

அரசு உதவி பெறும் கல்லூரிகளை கை கழுவும் திராவிட மாடல் அரசு!

பல்துறைசார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஒரு கல்லூரிக்குள் பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள். அறிவியல் படிப்புகள், கலை-அறிவியல் படிப்புகள், வணிகம்-மேலாண்மை படிப்புகள். திறன் சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தமிழ்நாட்டிலுள்ள பல அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழங்களாக மாறுவதற்கு முயற்ச்சித்து வருகின்றன. இதன் மூலம்…

ஐந்தாம் இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!
ஆனால் ஆம்புலன்ஸ் வர சாலை இல்லை!

    மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில்  25 வயதான மாமோனி ராய் என்ற இளம்பெண், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நாடுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு போராடியும் அவரது கிராமத்தின் மோசமான சாலை கட்டமைப்பை காரணம் காட்டி எந்த ஒரு அவசர ஊதியும் வர மறுத்துவிட்டது. வேறுவழியின்றி உறவினர்கள் அவரை  மரக்…

பருவமழையால் இந்திய நகரங்கள் ஏன் சீரழிவின் விளிம்பிற்கு தள்ளபடுகின்றன?

பருவமழை தொடங்கிவிட்டாலே, இந்திய நகர்ப்புற மக்களின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது. தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என இந்தியாவின் பெரு நகரங்கள் சிறு மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருவதோடு எல்லா வகையிலும் சீரழிந்து வருகின்றன. சிறுமழைக்குக் கூட நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இயற்கை அமைப்பில் உள்ள பல …