செங்கனல்

செங்கனல்

பாசிச எதிர்ப்பு பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதே இன்றைக்கு நமது முக்கிய கடமை!

காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டு மக்களின் மீது பாசிச சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று மட்டும் பார்ப்பது தவறு. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் என…

2024 – மே தினத்தில் உறுதியேற்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
கார்ப்பரேட் சுரண்டலுக்குக் கல்லறை எழுப்புவோம்!

எமதருமை உழைக்கும் பாட்டாளி வர்க்கமே! மக்கள் சமூகமானது, சுரண்டுவோர் – சுரண்டப்படுவோர் என பிளவுபட்டதன் விளைவு, சுரண்டுவோரின் சொத்துக்கள் (மூலதனம்) பெருத்துக் கொழிப்பதும் சுரண்டப்படுவோர் வறுமையிலும் பட்டினியிலும் பெருகி வருவதும் நடந்தேறுகிறது. இவற்றை சமன்படுத்தும் முயற்சியாக, ஆட்சியாளர்கள் உறுதியேற்பதும் இயலாமல் போவதும் வழக்கமாகிவிட்டது. இதனால், பெரும்பான்மை உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு, உழைப்புக்கேற்ற கூலிக் கிடைக்காமல், சொற்பக்…

பாசிச எதிர்ப்பைக் கைவிட்டு ஓட்டுச் சீட்டு ‘லாவணி’ நடத்தும் இந்தியா கூட்டணி கட்சிகள்

  பாசிச சக்தியான பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப் போவதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி என்பது ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், பாசிச எதிர்ப்பிற்கும் இந்தக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாம் தொடக்கம் முதலாக கூறிவருகிறோம். ஆனால் திமுகவின் தீவிர விசுவாசிகளோ இவ்வாறு கூறுவதென்பது பாசிசத்திற்குச் சாதகமாக…

பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

 

 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களைப் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கூட்டத்திற்கு, கட்டுப்பாடின்றி குழந்தைகளைப் பெற்றுப் போடும் கூட்டத்திற்கு இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துக் கொடுக்க போகிறது என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருகிறார் நரேந்திர …

லெனினை கற்போம்!
அவரின் சிறந்த மாணாக்கராக உருவாகுவோம்!

லெனினின் 154-வது பிறந்த நாளில் லெனினின் கற்றல் முறையையும் அவர் மார்க்சிடமிருந்து எவ்வாறு பருண்மையான சூழ்நிலைமைகளில் ஆலோசனைப் பெற்றார் என்பதையும் தோழர் குரூப்ஸ்கயா நினைவுகூர்ந்ததை இங்கு  வெளியிடுகிறோம்.

இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் தற்காலிகத் தோல்விக்கும், பின்னடைவுக்கும், பிளவுக்குமான காரணங்களை யதார்த்த பூர்வமாகப் பரிசிலிப்பதும், எந்தவித தயக்கமும் இன்றி தவறுகளைக் களைந்து, சரியான படிப்பினைகளை பரிசீலித்து, தேவையான …

பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!

2024 – மே தினத்தில் உறுதியேற்போம்! பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! பிரச்சாரம், பேரணி, ஆர்ப்பட்டம் அன்பார்ந்த பாட்டாளி வர்க்கமே! நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், தங்களுக்கு விருப்பமுள்ள, உறுப்பினராகவுள்ள, இலவசங்களை வாரியிறைத்து மக்களை ஏமாற்றும்…

தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு
நிலைப்பாடற்றுத் திரியும்
 வினவுக்குத் தலைமையளிக்கும்
லும்பன் கும்பல்! – பாகம் 1

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் (தற்போது புரட்சிகர மக்கள் அதிகாரம் என்று பெயர் மாற்றியுள்ளோம்) ஆகிய அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகளைத் துறந்தோடி, அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலாகச் சீரழிந்திருக்கும் வினவு இணையதளத்தின் அரசியல் தலைமையை அம்பலப்படுத்தி எமது இணையதளத்தில் ஏற்கனவே இரண்டு …

ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

“அரசாங்கம் மாறியதும், ‘ஜனநாயகத்தைக் கொலை’ செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்! மேலும் இதையெல்லாம் செய்ய யாருக்கும் தைரியம் வராத வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்” இது ராகுல் காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டது.   

ராகுலின் கோபத்திற்கு காரணம், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சிக்கு 1862 கோடி …

கலைப்புவாதிகளின் ஆளும்வர்க்க சரணடைவை நியாயப்படுத்தும் வினைசெய்

 

எமது தோழமை அமைப்புக்களான மகஇக, மக்கள் அதிகாரம், புஜதொமு, புமஇமு உள்ளிட்ட அமைப்புகளிலும் அவற்றின் அரசியல் தலைமையிலும் கலைப்புவாதத்தை பரப்பி, சதி செய்து அமைப்பைப் பிளந்து, அமைப்பை விட்டும், புரட்சிகர அரசியலை விட்டும் ஓடிப்போன ஓடுகாலிகலான மருதையன் கும்பலானது தற்போது ஆளும்வர்க்க கட்சிகளின் பாதந்தாங்கிகளாகச் சீரழிந்துள்ளது. மருதையனது அடியொற்றி, கோவன், காளியப்பன் கும்பலின் அமைப்புகளும், …