செங்கனல்

செங்கனல்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா :
காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம்!

இந்திய அரசுக் கட்டமைப்பில் பல்வேறு விதமான துறைகளும், அவற்றை நிர்வகிக்க அதிகாரிகள் பட்டாளமும் குவிந்து கிடக்கின்றன. இந்த பல்வேறு அரசுத்துறைகளுள் ஒன்றான தேர்தல் ஆணையத்தை மற்ற அரசுத்துறைகளோடு ஒப்பிடுவதை என்றைக்கும் ஓட்டுக் கட்சிகள் விரும்புவதில்லை. அதனை சுயேட்சையான அமைப்பாக, தேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்தியே வந்துள்ளனர். 

தேர்தல் ஆணையம் சுயேட்சையானது, அது விருப்பு வெறுப்பு இன்றி …

வாராக்கடன் தள்ளுபடி: முதலாளிகளுக்கு அமிர்தமும் மக்களுக்கு ஆலகாலவிசமும்!

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி என்பது அப்பட்டமான கார்ப்பரேட் /முதலாளிகளுக்கான ஆட்சி. முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுப்பதை மக்களுக்கானது என்று விளம்பரப்படுத்துவதில் இந்த காவிக் கூட்டம் கைதேர்ந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஏழை எளிய மக்களுக்காக எதுவும் செய்வதில்லை.  அதற்கான சமீபத்திய உதாரணம் முதலாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள 12.01 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் கிராமப்புற மக்களின் …

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!

நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு நீதி வேண்டுமா? வீதிக்கு வா! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! 14.08.2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மாணவர்களே! கல்வியாளர்களே! சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், தனது மருத்துவ கனவு நனவாகாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவரான ஜெகதீஸ்வரன் பொதுத்தேர்வில் 424 மதிப்பெண்கள்…

மின்கட்டண உயர்வு:
மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!
பிரச்சார வெளியீடு

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…

நீட் : அம்மாசியப்பனின் அறச்சீற்றம் – கவிதை

அம்மாசியப்பன் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்தான்! கொண்டாட அருகதை உள்ளதா நமக்கு? யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கவர்னர் மாளிகைக்குள்ளிருந்தே நீட்டுக்கெதிராக கலகக் குரலொன்று ஒலிக்குமென்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும் “பாசிச பா.ஜ.க. ஒழிக” என மாணவியொருத்தி வெடித்தெழுவாள் என்று. யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை, கர்நாடகத்தில் ‘ஹிஜாபை கழற்று’ எனச் சூழ்ந்துகொண்ட ஓநாய்களுக்கு நடுவே…

மின்கட்டண உயர்வு – மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! தோழர்.முத்துக்குமார் உரை

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டம். இது குறித்து விளக்கிப் பேசுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில…

பசுக்குண்டர்கள் – காவி பாசிச கும்பலின் சட்டபூர்வ அடியாட்படை!

மணிப்பூரில் நடைப்பெற்ற கலவரம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காவி பாசிஸ்டுகளோ, தாம் கட்டவிழ்த்து விடும் மத, இனவெறிப் படுகொலைகள் மணிப்பூர் மாநிலத்தோடு மட்டும் நின்று விடக்கூடியவை அல்ல, இது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் என நிருபிக்கும் வகையில், ஹரியானாவில் அடுத்த மதக்கலவரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இன் …

எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பதுதான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று ஏதோ …

தமிழக போலீசின் காவி பாசம்

ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மதவெறி பிடித்த மிருகம் ஒன்று, ஜெய்ப்பூர் ரயிலில் பயணம் செய்த அப்பாவி இஸ்லாமியர்கள் மூவரை, அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு நடந்த போது, இது எங்கோ வடக்கில் நடந்த தனித்த சம்பவம் என்றே பலரும் நினைத்தனர். ஊடகங்களும் அதனை அவ்வாறே பிரச்சாரமும்…

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 3

ஆர்எஸ்எஸ் – இன் தலைமைக் குருவாக மிக நீண்டகாலம் அதாவது 33 ஆண்டுகள் பதவி வகித்தவர் “குருஜி” கோல்வால்கர். ஆனால் அதற்குள், “என் கண்முன்னால் ஒரு சிறு வடிவிலான இந்து ராஷ்டிரத்தைக் காண்கிறேன்” என்று அதன் நிறுவன குரு ஹெட்கேவார் தனது இறுதி உறையில் பீற்றிக் கொள்ளும் அளவு ஆர்எஸ்எஸ் வளர்ந்துவிட்டது. அசாம், ஒரிசா, காஷ்மீர்…