செங்கனல்

செங்கனல்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் : பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவு!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தெலுங்கானா தவிர பிற நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சட்டீஸ்கர், இராஜஸ்தான் மாநிலங்களை பாஜகவிடம். பறிகொடுத்துள்ளது மத்தியபிரதேசத்தில் பாஜக தன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளது.

பாசிசம், ஏறித்தாக்கும் இன்றைய வேளையில், தேர்தலின் மூலமே பாசிச பாஜக …

போர் குற்றவாளி – அமெரிக்க அதிகாரி ஹென்றி கிஸிஞ்சரின் மரணம் உலக உழைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியே..!

    அமெரிக்க அணு – ஆயுத வெளியுறவுக் கொள்கை அதிகாரியும் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியான ஹென்றி கிஸிஞ்சரின் மரணம், உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை நிறுவிவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அடியாளான அதிபர்களுக்கும் ஒரு இழப்பே என்றால் அவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், அமெரிக்க போர் வெறியால் உயிரை, உடல் உறுப்புகளை, வாழ்வுரிமையை இழந்து அகதிகளாக அன்றாடம் அவதிப்படும்…

நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை

4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.. நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு !   உரை : தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர்.    …

சென்னையில் தொடரும் மழை வெள்ளம்: இயற்கையின் பேரிடரா? தனியார்மயம் உருவாக்கிய அழிவா?

மிக்ஜாம் புயலுக்கு மீண்டும் எழுதல் மற்றும் உறுதி என்பதை உணர்த்தும் வகையில் மியான்மர் நாடு அதற்கு பெயரிட்டது. ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் இப்புயலின் தாக்கத்தால் நிலைகுலைந்துப் போயுள்ளனர். செயற்கையாகவும், அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இயற்கை, அவ்வப்போது இந்திய நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது.

 …

பல ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களால்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட
ஜம்மு-காஷ்மீர் பின்தங்கிய நிலையில் உள்ளதா?
[ஜம்மு-காஷ்மீரின்] சமூக-பொருளாதாரம் பற்றிய
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

ஒன்றிய மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து அதை இரு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது செல்லும் என்று ஆகஸ்டு 11 2023 அன்று உச்ச(மனு)நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீரின் 370-வது சிறப்புப் பிரிவின் காரணமாக அங்கு யாரும் நிலம் வாங்க முடியவில்லை; அதனால் அம்மாநிலத்தின் வளர்ச்சியே குன்றிவிட்டது. தொழில்வாய்ப்புகள் பறிபோய்விட்டன; – …

ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!

ரேசன் கடைகளை மீண்டும் திற! புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசையை பெண்கள் முற்றுகை!

புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை. அரிசி, பருப்பு தொடங்கி பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் …

சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது…… ……..அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உணவு …

சட்டத்திற்குக் கட்டுப்படாத ஆளுநர்.
நீதிமன்றம் அல்ல மக்கள் மன்றமே சரியான தீர்ப்பை தரமுடியும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்புவதற்கு வழியில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதுடன், மசோதா பிரச்சனையை தமிழக முதலமைச்சருடன் பேசித் தீருங்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

நிலுவையில் உள்ள …

உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி

இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.    …

பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும்
மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்!

தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய பரிந்துரைகளில் பிரதானமானது பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது. புதிய நிலைமைகளுக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று மோடி கும்பல் பொதுவெளியில் பேசி வந்தாலும் இந்து தேசிய வெறி கண்ணோட்டத்தை மாணவர்களிடம் ஆழமாக பதிய வைப்பதற்கான வாய்ப்பாகத்தான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இதனைக் கருதுகிறது. …