Category அமெரிக்க ஏகாதிபத்தியம்

ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டால்
மரியாதை கிடைக்குமா?

மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக் கூட துப்பில்லாமல் வாய்மூடி மௌனமாக இருக்கிறது மோடி அரசு.

இந்த ஆண்டில் மட்டும், …

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

இத்திட்டத்தை நான்கு இணைத் திட்டங்களாக மோடி அரசு செயல்படுத்தப்போகிறது. முதலாவதாக கிரேட் …

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத்  தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும், விருப்பத்தையும் இணைக்கும் நூலாகவும் உள்ளது. இருப்பினும், இன்று, இந்த உயிர்நாடி வேகமாக உடைந்து…

அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா

உலகிற்கே விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். மோடிதான் உக்ரைன் போரை நிறுத்தப் போகிறார், ஜி  20 போன்ற சர்வதேச மாநாடுகளில் மோடியின் ஆளுமையை பன்னாட்டுத் தலைவர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், மோடியின் தலைமையில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகிறது என்பதை அமெரிக்காவே ஏற்றுக் கொண்டுவிட்டது, என நரேந்திர மோடியின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டி அவரது …

வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் விவசாயத்தையும் சிறு தொழிலையும் அழித்து இந்திய இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தும் “அடிமை சாசனம்”

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன், “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இராணுவத் தாக்குதலையும் இந்தியா தொடுத்தது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததுடன், பாகிஸ்தானின் முக்கிய விமானதளங்களையும் …

பரஸ்பர வரி – பதிலடி வரி என்ற பெயரில் உலக மேலாதிக்க அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரை முறியடிப்போம்!

  உலக மேலாதிக்க அமெரிக்காவின், அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் துவக்கமாக ஏப்ரல் 2 முதல் பதிலடி வரி அல்லது பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்கிற கத்தியை, இந்தியா, வெனிசுலா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகள் மீதும்…

எலான் மஸ்குக்கு சிவப்புக் கம்பளம் இந்திய சிறுமுதலாளிகளுக்கு பட்டைநாமம்!

மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ …

ஏகாதிபத்திய அடிமைகளுக்கு சொந்த நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாம், இதனை எழுதியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். எழுதியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சங்கிகள் பொங்கி எழுந்துவிட்டனர். குறிப்பாக ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசன் என்னும் அமைப்பு FBI இதில் …

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். 

இந்த பயணம் “வெகுசிரத்தையாக, நுணுக்கமாக, ராஜதந்திரமாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்” காவிக் கும்பலின் சமூக …

வங்கதேசம் – ஏகாதிபத்தியத்தின் ஆசியுடன் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?
கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க, எரியும் நெருப்பில் விழலாமா?

 

வங்கதேசத்தில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த பாசிஸ்டான ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தற்போது வங்கதேசத்தில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் விசுவாசியான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மாணவர் எழுச்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என …