செங்கனல்

செங்கனல்

தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் அருகில் 31.07.2022 அன்று காலை 11 மணிக்கு ஐக்கிய விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒராண்டாக நடைபெற்ற நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களை…

பொய் வழக்கிலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கு தான் எழுத்துரிமையோ, பேச்சுரிமையோ போராடுகிற உரிமையோ வாசனைக்கு கூட கிடையாது. ஜனநாயக முறைபடி போராடினால் கூட பொய் வழக்கு போடுவது, பிரசுரம் கொடுத்தால் சிறையில் தள்ளுவது என எந்த சட்ட விழுமியங்களையும் போலீசு பின்பற்றுவது கிடையாது, மாறாக அடக்குமுறை கருவியாகவே போலீசு உள்ளது. நீதிமன்றமோ…

முகமது ஜுபைர்: பாசிச ஒடுக்கமுறையின் சமீபத்திய இலக்கு

ஜுன் 27 ல் ஜெர்மனியில் நடைபெற்ற G7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி G7 நாடுகள் சேர்ந்து வெளியிட்ட, கருத்துரிமை மற்றும்   பத்திரிக்கை சுகந்திரத்தை (online&offline) பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஆதரித்து  கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவிலும் கருத்துரிமை மற்றும் பத்திரிக்கை சுகந்திரம்(online&offline) பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நாளில்  பத்திரிக்கையாளரும் செய்திகளின்…

தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்! மோடி அரசின் கையாலாகாத்தனம்!

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் படி பார்த்தால் 16 கோடி பேருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையின்மையின் அளவானது இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. அக்னீபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் உள்ள 30000 பணிகளுக்கு…

மாணவி ஸ்ரீமதி மரணம் : எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜுலை 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தை வன்முறையாகவும் கலவரமாகவும் அராஜகமாகவும் சித்தரிப்பதிலும், அந்த அருவருக்கத்தக்க பெருங்கூச்சலுக்குள் மாணவியின் மரணத்தை தற்கொலை என்று புதைத்துவிட்டதில் வெற்றி கண்டுள்ளன தமிழக அரசும் நீதிமன்றங்களும். இச்சம்பவம் தொடர்பாக போலிசு எதைச் செய்தியாக்க விரும்பியதோ அதை மட்டுமே வெளியிட்டு, வர்க்கப் பாசம் வழிந்தோட தனியார்…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தபாடி கிராமத்தில் காலங்காலமாக சாலை ஓரங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் அவல நிலை.

வல்லரசாக வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறும் நமது நாட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு வசதி இல்லாமல் பிணங்களை எரிப்பதும், புதைப்பதும் சாலை ஓரமே நடைபெற்று வருகிறது. இது குறித்து ஊர் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், போராடியும் வந்துள்ளனர். ஆனால் அரசோ கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. முதலாளிகள் நலன் என்றால் ஓடோடி சேவை…

இந்துராஷ்டிரத்திற்குள் பழங்குடியினரை இழுக்கும் பாசக் கயிறு.

இந்தியாவின் 15வது அரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டுள்ளார். அரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஆரம்பத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது. முர்முவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள்…

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிதல்களை மோடி அரசு 2017ம் ஆண்டில் அறிவித்தபோது அதில் கல்வி தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக புகுத்தப்பட்டதுதான் மூக்ஸ் (Massive open online course), இதன் படி நம் நாட்டின் உயர்கல்வித் துறையில் கல்லூரிப் பாடங்களை இணையவழியில் கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு,…

தோழர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர்.கணேசன்(எ) அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி பல தடைகளை கடந்து தர்மபுரியில் இன்று 17.07.2022 சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28.06.2022 அன்று தோழர்.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். தோழரின் அர்ப்பணிப்பு தியாகத்தை போற்றுகின்ற வகையில் குறிப்பாக நக்சல்பாரி மண்ணில் தோழர்.கணேசனின் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தருமபுரி நகரில்…