செங்கனல்

செங்கனல்

ஆர்.எஸ்.எஸ்.சின் கோரமுகத்தை மறைத்து பாதுகாக்கும் சி.பி.ஐ.

இஸ்லாமிய பயங்கரவாதம் என மூச்சுக்கு முன்னூறுதரம் முழங்கும் காவிகளுக்கு, காவி பயங்கரவாதம் எனும் சொல் எட்டிக்காயாய் கசக்கிறது. நாடு முழுவதும் கலவரம் செய்து சிறுபான்மையினத்தவரைக் கொன்று குவித்தது மட்டுமல்லாது, திட்டமிட்ட குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொல்லும் வேலையிலும் காவி பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பலமுறை அம்பலமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் நாண்டெட் குண்டுவெடிப்பு. 2006 ஆண்டில்…

ஜக்கிக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றிய அரசு

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கட்டிடங்களுடனும், 112 அடி உயர ஆதியோகி சிலையுடனும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆசிரமம் பல்வேறு சுற்றுச்சூழல் விதி மீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அந்த ஆசிரமம் அடர்த்தியான வனத்திற்கு நடுவில், காற்றாறுகளுக்கும், …

ராஜ ராஜ சோழன் – சனாதனத்திற்கு சேவை செய்த பார்ப்பனிய அடிமை!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்த விவாதம் தமிழக காட்சி மற்றும் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த தின விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கிறார்கள் எனக் கூறிவிட …

கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களைப் பெருக்க ஒரே கட்சி, ஒரே ஆட்சி!

“மக்கள் சேவையை மட்டுமே பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது” என்பதற்கு உலகமகா சாதனைகளாக குஜராத்தில் அணைகள் கட்டியது, கடற்கரை பகுதியை மேம்படுத்தியது, அருங்காட்சியகம் அமைத்தது, துறைமுகங்களை நவீனப்படுத்தியது, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சியை எட்டியது அனைத்திற்கும் காரணம் ஒன்றியத்திலும் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வான ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததுதான். எனவே ‘ஒன்றியத்திலும், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால்தான்…

தொழிலாளர்களின் ஊனை உருக்கும் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் – புகைப்படக் கட்டுரை:

இந்தியாவில் மின்சாரம் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரியை  வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்காக சுரண்டப்படும் தசையுள்ள சுரங்கங்கள். இத்தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அசைக்கும் ஒவ்வொரு கை அசைவிலும் தான் இந்தியா ஒளிர்கிறது. நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகளும், பெரும் நிலக்கரி மாபியாக்களுமே கட்டுப்படுத்துகிறார்கள். இதில்…

பி.எப்.ஐ மீதான ஒடுக்குமுறை/தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பலின் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு : பாகம் – 2

பி.எப்.ஐ மீதான தடைக்கு மோடி அரசு கூறும் காரணங்களை குறித்து பாகம் -1ல் எழுதியிருந்தோம். இத்தடையை ஆதரிப்பவர்கள், மோடி அரசு நீண்டகாலமாக பி.எப்.ஐ செயல்பாடுகளை கண்காணித்து வந்ததாகவும் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பி.எப்.ஐ அலுவலங்களில் சோதனை மற்றும் தடை நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளதாகவும் வாதாடுகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக ரிபப்பளிக் டிவி, ஆஜ்தக் டிவி, ஜீ …

பசுக்களை பாதுகாக்க கோசாலை மையங்கள் திறப்பு! குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடல்!

நாடு அதிகாரம் மாற்றமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது; இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 நாளை அமிருத பெருவிழாவாக  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது மோடிக்கும்பல். ஆனால், இந்தியா அதிகாரம் மாற்றமடைந்த இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது, இந்திய தரகு முதலாளிகள் உலக பணக்கார பட்டியலில்…

சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசம்

தனக்கு எதிரான கருத்துக்கள் எந்த வழியில், வடிவத்தில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது என அடக்கி ஒடுக்கும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலானது, பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தனது ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கையில் இருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்த, பத்திரிக்கையாளர்கள், …

பரந்தூர் விமான நிலையம் – தமிழக மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் இவ்விமான நிலையம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தாங்கள் இக்கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுவோம் எனவும் கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக …

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வந்தனர் விசைத்தறி உரிமையாளர்கள். தற்போதைய மின் கட்டண …