செங்கனல்

செங்கனல்

மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது?

“மக்களுக்கு சேவை செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன், அதற்காக நான் நேர்மையற்றவர்களுக்கு பயப்பட மாட்டேன்.”,  “சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது”,  “ஒரு ஏழைத் தாயின் மகன், ஏழைகளை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான்.”,  “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துஸ்தானில் ஒருவர் கூட ஏழையாக இருக்கமாட்டார்கள்”, “சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் …

தேர்தல் நன்கொடை பத்திரம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும், பாசிச மோடி அரசின் பிரம்மாஸ்திரமான ‘CAA’வும்!

    அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறையானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை – கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது. மேலும், அரசிடம் கணக்கு …

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். வேண்டாம் சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்பதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டமானது நடைமுறைக்கு வருவதாக பாசிச மோடி கும்பல் கடந்தவாரம் அறிவித்தது. இசுலாமியர்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை இரண்டாகப் பிளந்து இந்துராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தை…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

 

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கான விதிகளைக் கடந்த திங்களன்று அரசிதழில் வெளியிட்டு, நாடும் முழுவதும் இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சி.ஏ.ஏ. குறித்த விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. 2019ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தங்களை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்ததையொட்டி, அதிலும் குறிப்பாக …

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்!

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் : ஆசிரியர்கள், கல்வியாளர்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டல்! 10.03.2024 கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியர் சு.உமா மகேஸ்வரி அவர்களை பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது‌. செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து அறிவியல் பூர்வமான, ஜனநாயகப் பூர்வமான…

அரசியலற்ற போராட்டங்களின் பின்னே வால்பிடித்துச் சென்று, அதை வானளாவப் புகழும் அரசியலற்ற லும்பன் கும்பல்

 

 

கடந்த 19.02.2023 அன்று சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அக்கல்லூரி முதல்வருக்கெதிராகப் போராட்டத்தில் இறங்கியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக நாங்கள் அறிந்தோம். ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் ஆகிய எமது அமைப்புகளின் கொள்கையைத் துறந்தோடி, அவற்றின் பெயரைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசியலற்ற லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் சிலர், …

பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

 

 

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் (நரி சக்தி) என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட, பெண் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறித்தி ஜனவரி மாத இறுதியில் முதலாளிகளுக்கான புதிய …

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

 

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும் பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேக்ஸ்வெல் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஒரு …

தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிவோம்! மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழியில் பயணிப்போம்!

 

புலி வருது, புலி வருது என்று பயங்காட்டி வந்த, ரஜினி அரசியலுக்கு வருவது இனி சாத்தியமில்லை என்றாகிவிட்ட சூழலில், விஜய்-ன் மக்கள் இயக்கமானது, தமிழக வெற்றி கழகமாக உருமாறி, சட்டமன்ற, நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில், வலம் வருவது என்ற முடிவை ‘துணிச்சலாக’ எடுத்துள்ளது என்று ஊடகங்கள் ஊளையிடுகின்றன. இந்த ‘துணிச்சலான’ முடிவை வரவேற்று, இவருடைய …

தோழர் ஸ்டாலினும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அவரது போராட்டமும்! – பாகம் – 1

 

 

மனித குல வரலாற்றில் மரணத்திற்கு பின்பு எதிரிகளால் கேவலமாக தூற்றப்பட்டவர்களில் தோழர் ஸ்டாலினை போன்று வேறு யாரும் இருக்க முடியாது. ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி; கொடுங்கோலன் போன்ற அவதூறுகள் பொய்களாக, குப்பைகளாக இன்றளவும் உலகம் முழுவதும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கான ஆதாரங்களை யார் கேட்கப்போகிறார்கள் என அசட்டுத் துணிச்சலுக்கு …