செங்கனல்

செங்கனல்

ஊதிய உயர்வுக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டமும்
அதை அடக்கி ஒடுக்கும் வங்கதேச அரசும்

    வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஊதிய உயர்வுக்காகப் போராடி வருகிறார்கள். மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக உள்ள 8,000 டகா-வை ($70) (இந்திய மதிப்பில் சுமார் 5800 ரூபாயை) 23,000 டகா-வாக ($209) (சுமார் 17,300 ரூபாயாக) உயர்த்தப் போராடி வருகிறார்கள். வங்கதேசத்தின் 3500 ஆடை தொழிற்சாலைகள்…

தில்லி காற்று மாசுபாடு – காரணம் யார்: விவசாயிகளா? கார்ப்பரேட் நல அரசா?

இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் தான் காரணம் என ஆளும் வர்க்கமும், அதன் ஊடகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு வயல்களில் வைக்கோல்களை எரிப்பதனால் தான் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

மோடி-அமித்ஷா கும்பலின் பொருளாதார வளர்ச்சி என்ற மோசடி!

தன்னை முன்றாவது முறையாக தேர்ந்தெடுத்தால் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்திக் காட்டுவேன் என்றார் ‘உத்தமர்’ பிரதமர் மோடி. இது அமைச்சர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கை முதலாளிகள், சிஇஒ கள் மத்தியில் கடந்த ஜூலையில் நடைபெற்ற பாரத்மண்டபம் திறப்பு விழாவில் மோடி பேசியது. இக்கும்பல், மோடியின் ஆட்சிகாலத்தில் இதற்கு முன்பு இருந்ததை விட இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று …

இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல். காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் குண்டுவீசித் தகர்த்ததுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து…

ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்!

 

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குலாம் முகமது என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவர் காலில் ஜி.பி.எஸ் (Global Positioning System) கருவியை காஷ்மீர் போலீசார் பொருத்தியுள்ளனர்.…

புரட்சி வரும் இல்லையா அம்மா?

ஏய்… அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே… அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப் போர் செய்கிறோமா? ஆமாகண்னு! அப்படித்தான் நினைக்கிறேன். நாம் ஏன் அவங்களோட போரிடனும் அம்மா? ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள். அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா? ஆமாண்டா அது…

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

    கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு மாநில தோல்விக்கே இந்த கலவரக் குரல் என்றால் நடைபெறவிருக்கும் 5…