இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல். காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்காமல் குண்டுவீசித் தகர்த்ததுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து…