செங்கனல்

செங்கனல்

ஆரிய – பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம் !

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவை பாதுகாக்க இந்துக்களாக அணி திரள வேண்டும் என்று அப்பட்டமான…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு போராடு!
பிரச்சார வெளியீடு

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ”ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக ஒரு சிறு வெளியீட்டையும் கொண்டு வந்துள்ளோம். வாங்கிப் படித்து …

பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!

பத்திரிகை செய்தி


புரட்சிகர மக்கள் அதிகாரம்
13-10-2024
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம்பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று கூறுவதுதான் பொருத்தமானதாகும். 

22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு

சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு. பாசிச எதிர்ப்பு என்று பம்மாத்து காட்டிவரும்…

இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

மோடியின் ஆட்சியின் கீழ்,  இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும்  தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே நகரத்திலிருந்து தில்லி நோக்கி சமூக செயற்பாட்டாளர்  சோனம் வாங்சுங் தலைமையில் நடைபயணம் …

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்திற்கு ஆதரவாக கட்டபஞ்சாயத்து செய்யும் திராவிட மாடல் அரசாங்கம்

 

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு.

சாம்சங்கில் பணிபுரியும் 1800 தொழிலாளர்களில் 1500 …

விமான சாகச நிகழ்வில் பார்வையாளர்கள் பலி காரணம் யார்?

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியான சோக நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னையின் கடற்கரையை ஒட்டி கடந்த ஞாயிறு அன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் குவிந்ததால் சென்னை நகரின் போக்குவரத்தே ஸ்தம்பித்து போனது. காலை 11 மணி …

பங்குச் சந்தை சூதாட்டத்தில் சிக்கிப் பணத்தை இழக்கும் இந்திய இளைஞர்கள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்  ஜுன் 4-ம் தேதியன்று பாஜகவும், பங்குச்சந்தையும் புதிய சாதனையின் உச்சத்தை தொடும் என மோடி பரப்புரை செய்தார். தாம் உருவாக்கிய சந்தை சார்பு சீர்திருத்தங்கள், வெளிப்படையான, வலுவான நிதிச் சூழலை உருவாக்கியதாக தம்பட்டம் அடித்தார்.

பங்குச்சந்தை உயர்வு பற்றி மோடியின் வாய்ச்சவடால் அனைத்தும் அப்பட்டமான …

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார்:
மக்கள் பணத்தில் முதலாளிகள் மஞ்சள் குளிப்பதற்கான ஏற்பாடு!

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோல் என்று ஆளும்வர்க்கங்களாலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மைல்கல் என்று பாஜகவாலும் பிரச்சாரம் செய்யப்பட்ட இத்திட்டம் அது முன்மொழிந்த இலக்குகள் எதையுமே எட்டவில்லை என்பதோடு தொழிற்துறைவளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் குறைந்திருக்கின்றன என்பதுமே எதார்த்தம்.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் …

ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்

  நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது. சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன, அம்பானி உலகப்…