Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப்…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு…

மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப் பரிவாரக் கும்பல், அதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை விதைக்கப் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி வருகின்றது. சமூக ஊடக வெளியில், அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்களை லட்சக்கணக்கில்…

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட…

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர…

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின்…

ஊபா கைதுகள்: சட்டபூர்வமாக அரங்கேறிவரும் பாசிசம்

இம் என்றால் கைது உம் என்றால் சிறை என்று அரசின் ஒடுக்குமுறைக் குறித்து பரவலாக சொல்வதுண்டு. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ ஒருபடி மேலே சென்று தங்களது கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை என்றாலே NSA, UAPA போன்ற மிகக்கடுமையான சட்டங்களை கொண்டு ஒடுக்கி வருகிறது.…

தனது கார்ப்ரேட் அடிமைத்தனத்தை மறைக்க பி.எஸ்.என்.எல். ஊழியர்களை மிரட்டும் அமைச்சர்.

ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு “ஒழுங்காக வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் நடந்த அலோசனைக் கூட்டத்தில் “உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதனை நீங்கள்…

5ஜி ஏலம் – தொலைதொடர்புத் துறையைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளின் கார்டல்

5ஜி அலைக்கற்றைகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஏலம் முடிவடைந்துவிட்டது. 7 நாட்கள் 40 சுற்றுக்கள் நடந்த ஏலத்தில் மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிற்கான அலைக்கற்றை, ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைத் தொகையாக 4.3 லட்சம் கோடி ருபாய் நிர்ணயம்…

அரிசிக்கும் ஜி.எஸ்டி., ஐ.சி.யூ.க்கும் ஜி.எஸ்.டி. – பாடல்

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ள காவி கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக கொண்டு வரப்பட்ட பாடல் …

You missed