செங்கனல்

செங்கனல்

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில்  72 குழந்தைகள்  இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற  மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது.

இந்த 72 பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் நம் கண்ணை விட்டு …

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது.  ஆனால் தற்போது 2023ல் மரபினிக் கடுகு மீண்டும் வந்திருக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஒரு …

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை. அசோகர் காலத்தில்…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு  (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண் ஆசிரமம்; அகோரிகளுக்கும் பார்ப்பன சாமியார்களுக்கும் ஒரு அமைப்பென்றால் கோயில் பூசாரிகளுக்கு கிராம பூசாரிகள் …

மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தோரும் உலகின் ஏதாவதொரு மூலையில் அமெரிக்கா போர் புரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர்களில் பல அமெரிக்க வீரர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் அதிகளவு உயிரிழப்பது என்பது பல சந்தர்ப்பங்களில் அந்நாட்டு அரசிற்கு உள்நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. வியட்நாம் முதல் ஆப்கான் வரை போருக்கெதிரான …

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது.…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின்…

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

அரசுப் பள்ளிகளில் படித்த முன்னால் மாணவர்களிடம் நிதி திரட்டி, அப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது தான் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டமாகும். இதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார்.

இத்திட்டம் ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் 50 கோடி நிதி கிடைத்திருப்பதாக பள்ளி …

தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தலும் ஆகாயப் புளுகன் ஆர்.என்.ரவியும்!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP-2020) எதிரான மனநிலை  பரவலாக காணப்பட்டாலும் ஒன்றிய அரசின் ஏஜென்டான ஆளுநர் ரவி கல்விக் கொள்கையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வது தொடர் கதையாகவே உள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ரவி தமிழக உயர்கல்வித் துறையில் கல்விக் கொள்கையை புகுத்துகின்ற வேலையையும் சனாதனத்தின் புகழ் பாடுவதையும் கூடவே மோடியின் …

வீட்டுப்பணியாளர்கள்: நவீன கொத்தடிமைகளா? நமது சக தொழிலாளர்களா?

பிற்போக்குக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் இந்தியக் குடும்பங்களில் வீட்டு வேலைகளைச் செய்வது இன்றைக்கும்கூட பெண்களின் பொறுப்பு என்ற எழுதப்படாத விதி உள்ளது. வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, சமைப்பது, குழந்தைகள், முதியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும் குடும்பத்துப் பெண்களின் கடமை என இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது. வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் கூட வீட்டு …