செங்கனல்

செங்கனல்

வேங்கைவயல் தாழ்த்தப்பட்டவர் குடிநீரில் மனிதக் கழிவு: ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை வெறியாட்டம் – வேடிக்கை பார்க்கும் அரசு

அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் ‘திராவிட மாடல்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அரசிற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால் விளிம்புநிலை மக்கள் பிரச்சினையில் திராவிட மாடல் தனது கடைக்கண் பார்வையைக்கூட காட்ட மறுக்கிறது. பொதுவில் கள்ளக்குறிச்சி விவகாரம், ஆசிரியர்கள் –…

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு

தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின்  அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியா முழுமைக்குமான ஒரே கலாச்சாரம். இதுதான் காவிக் கும்பல் நிறுவத்துடிக்கும்…

ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் – நிகழ்ச்சி நிரல்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம். ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர். சுந்தரராசு புதிய ஜனநாயகத் …

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை தாயாரித்த உரையை, ஆளுநரால் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டதை ஆர்.என். …

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில்  72 குழந்தைகள்  இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற  மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது.

இந்த 72 பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் நம் கண்ணை விட்டு …

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது.  ஆனால் தற்போது 2023ல் மரபினிக் கடுகு மீண்டும் வந்திருக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஒரு …

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை. அசோகர் காலத்தில்…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு  (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண் ஆசிரமம்; அகோரிகளுக்கும் பார்ப்பன சாமியார்களுக்கும் ஒரு அமைப்பென்றால் கோயில் பூசாரிகளுக்கு கிராம பூசாரிகள் …

மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தோரும் உலகின் ஏதாவதொரு மூலையில் அமெரிக்கா போர் புரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர்களில் பல அமெரிக்க வீரர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் அதிகளவு உயிரிழப்பது என்பது பல சந்தர்ப்பங்களில் அந்நாட்டு அரசிற்கு உள்நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. வியட்நாம் முதல் ஆப்கான் வரை போருக்கெதிரான …

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது.…