Category காவி கார்ப்பரேட் பாசிசம்

அதானியே பாஜக, பாஜகவே அதானி!

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஊடகங்களும் ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் தேர்தலை ஒரு ஜனநாயக திருவிழா …

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”

இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் …

ஜனநாயக சக்திகளை
அழித்தொழிக்க அரைகூவும் அர்ஜுன் சம்பத்!
பாசிசக் கோமாளியின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்!

பாசிஸ்டுகள், தங்களது எதிரி யார் என்பதற்கு எப்போதும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள், தங்களை விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் எனத் தங்களது பட்டியலில் உள்ள அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக கருதுவதுடன், அவர்களை ஒடுக்குவதையும் பாசிஸ்டுகள் திட்டமிட்டுச் செய்கின்றனர். முசோலினியின், இட்லரின் பாசிச இயக்கங்கள் தொடங்கி, நம் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவிப் …

நோஞ்சான் சமூகத்தை உருவாக்கும் பாசிச மோடி அரசு

 

 

திங்களன்று (21 அக்டோபர் 2024) நடைபெற்ற என்.டி.டிவி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும், இந்தியாவிற்கு வந்து குவியும் முதலீடுகளையும் பார்த்து உற்சாகமடைகின்றது” என்று பேசியுள்ளார். மேலும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, “கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பங்குச் சந்தை 22,300 புள்ளிகளில் இருந்து …

முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் புல்டோசர்
நாளை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மீது திரும்பும்

காவி கார்ப்பரேட் பாசிச சக்தியான மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. சங்கப்பரிவார கும்பல் தன் பாசிசப் படைகளைக் கொண்டு சிறுபான்மையினரின் மீது தாக்குதல் தொடுப்பது ஒரு புறம் என்றால், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போலீசையும், உள்ளாட்ட்சி அமைப்புகளையும் …

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.                 பாருங்கள்!!              …

வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கா? மக்களுக்கா?

  “வளர்ச்சிக்கு நக்சல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர்.” என்ற, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு, ஆதரவளிக்கும் வகையில் தினமணி நாளேடு, வாசகர் அரங்கம் என்கிற தலைப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளது. தினமணி உட்பட, நக்சல்பாரிகள் மீதான கருத்துக்களை உதிர்த்துள்ள வாசகர்கள் அனைவரும் ‘ஷா’ அள்ளி வீசிய அவதூறை, எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல், அவரவர் வார்த்தைகளில்,…

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார்:
மக்கள் பணத்தில் முதலாளிகள் மஞ்சள் குளிப்பதற்கான ஏற்பாடு!

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோல் என்று ஆளும்வர்க்கங்களாலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மைல்கல் என்று பாஜகவாலும் பிரச்சாரம் செய்யப்பட்ட இத்திட்டம் அது முன்மொழிந்த இலக்குகள் எதையுமே எட்டவில்லை என்பதோடு தொழிற்துறைவளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் குறைந்திருக்கின்றன என்பதுமே எதார்த்தம்.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் …

திருப்பதி லட்டில் கலப்படம்:
சாமானியர்களின் நம்பிக்கையை
கலவரத்திற்கு பயன்படுத்தும் காவிகள்.

 

 

தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணம் தெரியாமல், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியும் புரியாமல் கையறுநிலையில் …

கேள்வி கேட்பதற்கான ஜனநாயகத்தை பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

  கோவை கொடிசியாவின் தொழில் முனைவர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது, அனைவரும் அறிந்ததே. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவ உரிமையாளரும், கோவை உணவக சங்க கௌரவ தலைவருமான சீனிவாசன், GST-யில் உள்ள நிறை, குறைகளை, குளறுபடிகளை இந்த பாசிச முண்டங்களுக்கு புரியும் வகையில் ஜனரஞ்சகமாக, எளிமையாக, நகைச்சுவையாக எடுத்து முன்வைத்தார். அதிலும், அவர் GST-யை குறைக்கவோ, ரத்து…