Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில்…

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது என்று பெருமைக் கொள்கின்றன ஆளும் வர்க்க அறிவு அடிமைகளான …

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்குவதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கர்ஜித்து வருகிறார்.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் “மாநில …

மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப் பரிவாரக் கும்பல், அதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை விதைக்கப் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி வருகின்றது.

சமூக ஊடக வெளியில், அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்களை லட்சக்கணக்கில் உருவாக்கி அதன்மூலம் வதந்திகளைப் பரப்புவது அவர்களது முக்கியமான யுக்தி. 2014 வரை பாஜகவிற்குக் …

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி “திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை …

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர தினத்தன்று வெளியே வந்துள்ளனர்.

2002ம் ஆண்டு கோத்ரா சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீது …

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின் காரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடெடுத்தது.

ஆனால் அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு …

ஊபா கைதுகள்: சட்டபூர்வமாக அரங்கேறிவரும் பாசிசம்

இம் என்றால் கைது உம் என்றால் சிறை என்று அரசின் ஒடுக்குமுறைக் குறித்து பரவலாக சொல்வதுண்டு. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ ஒருபடி மேலே சென்று தங்களது கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை என்றாலே NSA, UAPA போன்ற மிகக்கடுமையான சட்டங்களை  கொண்டு ஒடுக்கி வருகிறது.

நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை …

தனது கார்ப்ரேட் அடிமைத்தனத்தை மறைக்க பி.எஸ்.என்.எல். ஊழியர்களை மிரட்டும் அமைச்சர்.

ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு “ஒழுங்காக வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் நடந்த அலோசனைக் கூட்டத்தில்  “உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதனை  நீங்கள் செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால் மூட்டையைக் கட்டுங்கள். சந்தேகமே வேண்டாம் இனி இதுபோன்ற முடிவுகள்…