அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன. மோடி அரசை விமர்சிப்பவர்கள் கூட “பாதுகாப்புக் குறைபாடு, அரசின் தோல்வி” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மாறாக, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அடிப்படை குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவோ எழுதவோ இல்லை! இது வேதனையான நிலைமை ஆகும்!
இத்தகைய சூழலில், நாடுமுழுவதும் கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியிலும் அதற்கு முன்னதாகவும் ஒருபாவமுமறியாத அப்பாவி இசுலாமியர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் இந்துவெறி (காவி) பாசிச பயங்கரவாதம்தான் இந்தியாவில் இசுலாமிய பயங்கரவாதம் வளர அடிப்படை! ஆணிவேர்! முன்னதை அறுத்தெறியாமல் பின்னதை அகற்றிவிட முடியாது – என்று எமது அமைப்புகளான புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியவை சார்பாக மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றோம். எதிர்வரும் ஜூன் 21-இல் சென்னையில் பெரும் ஆர்ப்பட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இப்பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இச்சிறுவெளியீட்டைக் கொண்டுவந்துள்ளோம். இச்சிறு வெளியீட்டில், மேலே கூறிய எமது கருத்தை வரலாற்று உண்மைகளோடு ஆதாரப்பூர்வமாகவும் தரவுகளோடும் விளக்கி நிறுவியுள்ளோம். உழைக்கும் மக்கள், ஜனநாயக, புரட்சிகர சக்திகள் அனைவரும் இவ்வெளியீட்டை வாங்கிப் படித்து ஆதரவு தாருங்கள்! பரப்புங்கள்!
வெளியிடுவோர் : புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 97901 38614, 90252 13374, 89030 42388
நன்கொடை : ரூ.20