Category காவி கார்ப்பரேட் பாசிசம்

கீழடி ஆய்வறிக்கை: மோடி-அமித்ஷா கும்பலுக்கு தெரிந்த பொய்களும், தெரியாத உண்மைகளும்

  சமீபத்தில் சென்னை வந்த ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில்…

குண்டுவைத்துக் கொலை செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காவி பயங்கரவாதிகள்!

2008-ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பிரயாக் சிங் தக்கூர் (இவர் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அபிநவ் பாரத்-இன் தலைவர் மற்றும் பாஜகவின் முன்னாள் எம்.பி.) …

புரட்சியின் கனலாக ஒளிவீச வருகிறது
செங்கனல் – அச்சு இதழ்

“ஒரு பத்திரிக்கை என்பது பிரச்சாரகன், கிளர்ச்சியாளன் மட்டுமல்ல; ஒரு அமைப்பாளனும் ஆகும்” என்ற லெனினின் வார்த்தைகளுக்கு ஏற்ப, 1985 நவம்பர் முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய – லெனினிய அரசியலை ஏந்தி வெளிவந்து கொண்டிருந்தது, எமது “புதிய ஜனநாயகம்” இதழ். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மா-லெ புரட்சிகர அரசியலைக் கொண்டு சென்று புரட்சித்…

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலும் காஷ்மீர் மக்களின் துயரங்களும்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு  இந்திய அரசுப் படைகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள  எட்டு வீடுகளை  தீவிரவாதிகளுடையது எனக்கூறி  வெடிபொருட்களை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியது.  இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்தி வரும் புல்டோசர் இராஜ்ஜியத்தை காஷ்மீருக்குள்ளும் விரிவுபடுத்தியிருக்கின்றனர் காவி பாசிஸ்டுகள்.  பிற மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் புல்டோசர் இராஜ்ஜியத்திற்கும் காஷ்மீருக்கும்…

கொரோனா உயிரிழப்பு: திட்டமிட்டு உண்மையை மறைத்த மோடி கும்பல்!

கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும்  தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து அவனுடைய வாழ்நாளை  எமதர்மன் தீர்மானிப்பதாக பொதுவான நம்பிக்கை இந்திய மக்களிடம் உண்டு. இது, …

போலி தேசியவெறியை, போர்வெறியைக் கடைவிரிக்கும் இந்தி சினிமா

ஓரே ஒரு தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்தி நாடு முழுவதையும் தனது போலி தேசிய வெறி, போர் வெறி அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதை  சமீபத்தில் காவி பாசிசக் கும்பல் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும், அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற மனநிலையைச்  சாமானிய இந்தியரின் மனதில் உருவாக்குவதற்கு, தொலைக்காட்சி, …

காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

 

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள இராமபத்ராசார்யா என்ற இந்து மதகுருவின் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். முழுமையான …

வறுமையையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்!

ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து,  பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக திருவாய் மலர்ந்துள்ளார். சொந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதாகக் கூறுவதும், பாகிஸ்தான் இந்தியாவை வெறுப்பதாக்…

இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து அழிப்பது வரை இந்தியா எடுத்துள்ள …

தங்க நகைக்கடன் தொடர்பான RBI-யின் புதிய வரைவு விதிகள்: மக்கள் மீது தொடுத்திருக்கும் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது முறைகேடுகளைச் செய்யும் வங்கி ஊழியர்களை தண்டிப்பதற்குப் பதிலாக…