ஒசூரில் தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மேதினத்தில் சூளுரைப்போம்! என்ற தலைப்பில் மே – 1 – 2025 இன்று காலை 9:00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் பாகலூர் கிளையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மே நாள் வரலாறு குறித்து உரையாற்றினர்.
தோழர். இரா.சங்கர் பொதுச்செயலாளர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அவர்கள் தலைமைத் தாங்கினார்.
தோழர். இரவிச்சந்திரன் மாவட்டத் தலைவர். பு.ஜ.தொ.மு அவர்கள் மே நாள் தியாகத்தை தொழிலாளி வர்க்கம் உயர்த்திப்பிடிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி கொடியேற்றி வைத்தார்.
தோழர். சின்னசாமி மாவட்டத் துணைத் தலைவர். பு.ஜ.தொ.மு அவர்கள் கம்யூனிச சித்தாந்தம்தான் அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தந்தது. இந்த உரிமைகளை அனுபவிக்காத மக்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. எனவே இந்தியாவில் நிலவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த கம்யூனிட் கட்சியின் தலைமையில் இணைந்து போராட வேண்டும் என்பதை விளக்கினார்.
தோழர்.ஜெயராமன் புரட்சிகர மக்கள் அதிகாரம் அவர்கள் பறிக்கப்படும் உரிமைகளை உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வல்லமை கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்கள் தான். சங்கத்தில் பெருந்திரளான தொழிலாளர்களை இணைக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்பதை விவரித்து பேசினார்.
தோழர். ஜா. எபினேசர் கிளை பொருளாளர். புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழக்கப்பட்டது. இதில் பெரும்திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டு தோழர்களுக்கு மேதின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தகவல்:
இரா.சங்கர்
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர் செல்:9025213374.