ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளிப்பகுதியில் பயங்கரவாதிகளால் (22.04.2025) அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதற்கு “தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்” என்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூரமான செயலை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.
ஆனால், இசுலாமிய பயங்கரவாதம் என்பது இந்தியாவில் இந்து மதவெறி பயங்கரவாதத்தின் கோரமான எதிர்விளைவே ஆகும். குறிப்பாக, கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து சட்டப்பிரிவு 370 ஐ சிறுகச் சிறுகச் காங்கிரசு அரசு சாகடித்தது. மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பலோ அதை முற்றாக ஒழித்துக் கட்டியுள்ளது. உச்ச (மனு)நீதி மன்றமும் மோடி அரசின் இந்நடவடிக்கையைச் சரியென்று நிலைநாட்டியுள்ளது. நாடுமுழுவதும் காவி பாசிசக் கும்பல் இசுலாமியர்கள் மீது தொடுத்துவரும் இந்து பயங்கரவாதமும் மேற்சொன்ன இந்திய தேசிய வெறியுமே இத்தகைய தாக்குதல்களுக்கு பிரதான பொறுப்பாகும்.
எனவே, இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் இந்திய தேசிய வெறியையும் ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒருக்காலும் ஒழியாது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துமதவெறிக் கும்பலோ இச்சம்பவத்தை ஒட்டி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறிக் கருத்துக்களைக் கக்கி கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.
உண்மை என்னவென்றால் அங்குள்ள இசுலாமியர்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றியுள்ளனர். உள்ளூர் குதிரை சவாரித் தொழிலாளியான சையது அடில் ஹூசைன் ஷா என்ற இஸ்லாமியர் பயங்கரவாதிகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக போராடியதில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் இருந்த மூன்று உள்ளூர் இஸ்லாமிய இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றி பாதுக்காத்துள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரின் இஸ்லாமிய இளைஞர்கள்தான் போராடியுள்ளனர். “இஸ்லாமிய டிரைவர் ஒருவர்தான் எங்கள் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்போம்” என்று கூறியதாக தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்ட ஓர் இந்துப் பெண் தெரிவிக்கிறார்.
ஆனால் மோடியின் ஊதுகுழல் பத்திரிக்கைகள் இவற்றைத் திட்டமிட்டு காண்பிக்க மறுக்கின்றன. மோடி அரசிற்கு எவ்வித கலங்கமும் வரக்கூடாது என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆஜ் தக் செய்தி நிறுவனத்தின் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் நேரலையில் பஹல்காமில் போலீசு மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே இல்லை என்பதை சொன்னவுடன் அச்செய்தியாளரின் நேரலையை நிறுத்துகிறார்கள். அர்னாப் கோஸ்வாமி என்ற ரிபப்ளிக் டிவி சங்கி #WeWantRevenge என்ற ஹேஷ்டேகில் பழிவாங்க வேண்டுமென்று ஊளையிடுகிறான்.
இச்சம்பவத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து மக்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள காவி பாசிஸ்டுகள் முயல்கின்றனர். உண்மைகளை மூடி மறைக்கின்றனர்.
நாடெங்கும் நடந்துவரும் இத்தகைய இந்துமதவெறிப் பிரச்சாரத்திற்கும் போலி தேசியவாத பிரச்சாரத்திற்கும் உழைக்கும் மக்கள் பலியாகக் கூடாது என்று புரட்சிகர மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614