Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…

ஒருவேளை பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால்?

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாமலே, பல குறுக்குவழிகளில் தங்களது ஆட்சியை நிறுவிவந்துள்ளது. பாஜகவிற்கு பெரிய அளவில் கட்சிக் கிளைகளோ, உறுப்பினர்களோ இல்லாத மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. …

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

 

 

எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும் ஆளுநர், வாய் திறந்தாலே தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்கள் …

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் – பாகம் 2

இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. கொலீஜியம் அமைப்பு பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கொலீஜியம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவான…

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம்

“இந்தியாவை பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் 
ஆபத்தானவை என்று கூற விரும்புகிறேன். மதமாற்றம், குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில் 
இவ்விரண்டு மதங்களும் சமமாக ஆபத்தானவை.

"இஸ்லாமிய பயங்கரவாதம் பச்சை பயங்கரவாதம் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதம் 
வெள்ளை பயங்கரவாதம்.

“கிறிஸ்துவப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது. நடராஜப் பெருமானின் 
தோரணையை இயேசு கிறிஸ்துவின் பெயருடன் 

மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்!

குறிப்பு: சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, பசு அரவணைப்பு தின அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல வாரியம் 10.02.2023 அன்று திரும்பப் பெற்றுள்ளது.

காதலர் தினம் (பிப்ரவரி 14) வந்தாலே காவி-காளிகளுக்கு கை அரிக்க ஆரம்பித்துவிடும். பூங்காக்களில் பேசிக் கொண்டிருக்கும் ஆண்-பெண் க்கு திருமணம் செய்து வைப்பது, இளைஞர்கள் …

2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்!

குஜராத் படுகொலை நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்டது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் (பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை) மோடியின் மேற்பார்வையில் சங்க பரிவார இந்துமதவெறி பயங்கரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு கிட்டத்தட்ட பொதுப் புத்தியிலிருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் இப்படுகொலையைப் பற்றியே அறியாத ஒரு இளம் …

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – திருச்சி – கருத்தரங்கம்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்றன. இதை ஒட்டி காவி கார்ப்பரேட்…

சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது – சாதி அடிப்படையில் சமூகத்தின் பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி…

செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு!

“தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல பாஜக தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம்…