Category காவி கார்ப்பரேட் பாசிசம்

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன், அதையே மையமாக வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய பாத யாத்திரை கிளம்பிவிட்டனர். …

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் கலவரம் பற்றி  விவாதம் நடத்த பாஜக மறுத்து வருவதால் நாடாளுமன்றத்தின் இரு …

ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!

மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் மத்திய பிரதேசத்தின் பிரவேஷ் சுக்லா. ம.பி யின்  சித்திக் மாவட்டத்தில்…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளது. அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேற்கு உத்திரபிரதேசத்தில்…

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசின்
அடுத்த ‘அஜெண்டா’ பொது சிவில் சட்டம்!

    பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி அரசின் ‘அஜெண்டா’க்களில் ஒன்றான பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் 14 அன்று ஒரு அறிக்கையை 22-வது சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.சவுகான் தலைமையில் 21-வது சட்ட ஆணையம் பொது…

செந்தில் பாலாஜி கைது – எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் பாசிச தாக்குதல்

    வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த சூழலில்…

மராட்டிய மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் காவி பாசிஸ்டுகள்!

மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளி திப்பு சுல்தானை, இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்து எப்படியாவது நாட்டில் கலவரத்தை உருவாக்கி விட  காவி கும்பல் தொடர்ந்து முயன்று வருகின்றது.

கர்நாடகாவில் திப்புவிற்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க இவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் பயனளிக்காத நிலையில் அதற்கு அண்டை மாநிலமான …

காவிகளின் கூடாரமாக மாறிவரும்
அலகாபாத் உயர்நீதிமன்றம்

 

 

கடந்த ஏப்ரல் மாதம் “நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் தனது என்ஜிஓ மூலமாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேரா. மோகன் கோபால், 2047 க்குள் நீதிமன்றத்தின் துணையோடு ஹிந்து ராஷ்ட்ரத்தினை நிறுவுவதற்காக நீதித்துறைக்குள் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செயல்படுத்தி வரும் திட்டங்கள் …

வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை

வரலாற்றைத் திரிப்பது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. தங்களது இந்துத்துவ கொள்கைகளுக்கு அதரவாக இந்திய வரலாற்றை எப்படியேனும் மாற்றி எழுதிவிட வேண்டும் என்ற நூற்றாண்டுகால கனவை நிறைவேற்ற ஏற்ற சூழலாக உள்ள மோடி ஆட்சியில் அதற்காக பலவகையான முயற்சிகளை செய்து வருகின்றது காவி பாசிச கும்பல். தங்களது சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் …

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரமே நாடாளுமன்றம்

    பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இந்திய நாடாளுமன்றம் செயல்பட்டிருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஆகப்…