அறிவு

அறிவு

மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கையும் – காவி பாசிஸ்டுகளின் அதானி பாசமும்

 

 

தனக்கு எதிராகவும், தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு எதிராகவும் யார் பேசினாலும் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதைக் காவி பாசிஸ்டுகள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது திரிணாமுல் காங்கிரசின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ராவையும் சேர்த்துள்ளனர்.

அதானிக்கு எதிராக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், …

நிறவெறி ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஜனநாயகம்

கடந்த ஜுன் மாத இறுதியில் உலகின் இரண்டு “தலைசிறந்த ஜனநாயக” நாடுகளின் ஆளும்வர்க்கத்தின் அடிமனதில் ஊறித்திளைத்துள்ள நிறவெறி இனவெறிக் கருத்துக்கள் பகீரங்கமாக வெளிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்ற நிகழ்வு. மற்றது அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நிற அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் …

ஒரிசா ரயில் விபத்து – தனது தவறை மறைக்க
கிரிமினல் சதி, சிபிஐ விசாரணை என நாடகமாடும் காவி கும்பல்

 

 

ஒரிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கின்றன.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் …

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தேசிய மருத்துவக் கமிசனின் அடாவடி 

 

 

தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ள தேசிய மருத்துவ கமிசன்,  இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் தடைவிதித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று அரசுக் கல்லூரிகளில் வருகைப் பதிவேட்டினைப் பராமரிக்கும் …

நீதிக்காக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக அரசு

“நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு நமது தீர்மானம்” என நரேந்திர மோடி, “ஜனநாயகத்தின் கோவில்” என்று வர்ணிக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்து தனது ஆட்சியின் ஜனநாயகம் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகிலேயே ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த…

2000 ரூபாய் நோட்டும் காவிகளின் அண்டப்புளுகும்

 

 

2016ம் ஆண்டு பணமதிப்ப்பிழப்பு நடவடிக்கையினை மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் அமுல்படுத்தியபோது நாட்டு மக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தனர். பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று பலர் உயிரைவிட்டனர். அவசர மருத்துவ தேவைகளுக்கும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் கூடப் …

போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாராய அதிபர்கள் இணைந்து நடத்திய படுகொலையே கள்ளச்சாராய மரணங்கள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 13ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் 8 பேர் என மொத்தம் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போயிருக்கிறார்கள். இது தவிற 60க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக…

மெக்சிக்கோவின் அதிபராக இருந்த அமெரிக்க உளவாளி

அந்நிய நாட்டு உளவாளி ஒரு நாட்டின் அதிபராக முடியுமா? அப்படி அதிபரானால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும்? இன்னொரு நாட்டின் அரசியலில் தலையிட்டு தனது உளவாளியை அதிபராக்கும் அளவிற்கு சதிவேலையில் ஈடுபடும் நாடு எத்தகைய நாடாக இருக்க முடியும்? ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை என வாய்கிழியப் பேசும் அமெரிக்காதான் இப்படிப்பட்டதொரு கீழ்த்தரமான வேலையைச் செய்துள்ளது.

சமீபத்தில் …