Category காவி கார்ப்பரேட் பாசிசம்

ஆப்பரேசன் காகர்: பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் உள்நாட்டு போர்!

ஆப்பரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழித்துக் கட்டுவதே இந்திய அரசின் நோக்கம் என்று தான் போகும் இடங்களிலெல்லாம் அறிவித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப்படைகள் …

ஜெய் ஸ்ரீராம்: மாணவர்களிடம் இந்து மதவெறியைத் தூண்டும் ஆளுநர் ரவி!

சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  

மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் …

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு.…

சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று நடனமாடிய துணை ராணுவப் படைகள்
– சோனி சோரி

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் செயற்பாட்டாளர் சோனி சோரி, இந்திய அரசு உள்நாட்டின் சில பகுதிகளைக் காலனியாக்கிவரும் இரத்தக்களரி தோய்ந்த நிலத்தில் நிமிர்ந்து நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிமவளம் நிறைந்த காடுகளின் உரிமைக்காக பழங்குடியினருக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் நீண்ட, நெடிய மோதல்களை அவரது வாழ்க்கை உள்ளடக்கியிருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சோனி சோரியை மாவோயிஸ்ட் …

கல்லறைக்கு அல்ல,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு
நடத்த வேண்டும் கரசேவை!

இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில் நடத்திய போராட்டத்தின் மூலம் நாக்பூரின் பல பகுதிகளில் கலவரத்தை அரங்கேற்றியுள்ளது.

இக்கலவரத்தில் வாகனங்களும், …

எலான் மஸ்குக்கு சிவப்புக் கம்பளம் இந்திய சிறுமுதலாளிகளுக்கு பட்டைநாமம்!

மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ …

மத்தியப் பிரதேசத்தில் தலைவிரித்தாடும்
காவி பயங்கரவாதம்!

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மாநில அரசு  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பசுப் பாதுகாப்பு ஆண்டு என அறிவித்திருந்தது. இம்மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் குண்டர்களின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.  

கடந்த மார்ச் 2ம் தேதியன்று  இந்தூர் அருகே …

ஏகாதிபத்திய அடிமைகளுக்கு சொந்த நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாம், இதனை எழுதியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். எழுதியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சங்கிகள் பொங்கி எழுந்துவிட்டனர். குறிப்பாக ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசன் என்னும் அமைப்பு FBI இதில் …

காவி கும்பலின் இந்திய வரலாற்றைத் திரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்

ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட காவி பாசிச சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை, வேதகால நாகரீகம் என நிறுவுவதற்கும், வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதி இந்தப் பகுதியில்தான் பாய்ந்தது எனக் காட்டுவதற்காகவும், இந்தியத் …

கும்பமேளா படுகொலைகள்: காவி பாசிஸ்டுகளின் அரசியல் லாபத்துக்காகப் பலியிடப்படும் பொதுமக்கள்

ஒன்றிய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நடத்தி வரும் மகா கும்பமேளா இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிந்து வருகிறார்கள். ஏற்கெனவே பிரயாக்ராஜ் நகரில் ஒரு முறையும், தில்லி இரயில் நிலையத்தில் ஒரு …