Category காவி கார்ப்பரேட் பாசிசம்

தமிழகம் முழுவதும் கலவரத்தை தூண்டும் நோக்கில் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய் – மக்கள் அதிகாரம்.

    வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்.…

அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய…

வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து குறைமின்கடத்திகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 1000 ஏக்கர் பரப்பளவில் குஜராத்தில் அமைக்கப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் மாநில அரசுடன் போட்டுள்ளது. 1.54 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) முதலீட்டில் அமைய உள்ள இத்தொழிற்சாலையில்  60 சதவிகித முதலீட்டை வேதாந்தாவும் 40 சதவிகித முதலீட்டை பாக்ஸ்கானும் முதலீடு செய்கின்றன. மேலும் …

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில்…

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது என்று பெருமைக் கொள்கின்றன ஆளும் வர்க்க அறிவு அடிமைகளான …

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்குவதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி…

முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கர்ஜித்து வருகிறார்.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் “மாநில …

மதமாற்றம், கோவில் இடிப்பு : புரளிகளைப் பரப்பி பிரிவினையை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப் பரிவாரக் கும்பல், அதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை விதைக்கப் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி வருகின்றது.

சமூக ஊடக வெளியில், அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் குழுக்களை லட்சக்கணக்கில் உருவாக்கி அதன்மூலம் வதந்திகளைப் பரப்புவது அவர்களது முக்கியமான யுக்தி. 2014 வரை பாஜகவிற்குக் …

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி “திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை …

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர தினத்தன்று வெளியே வந்துள்ளனர்.

2002ம் ஆண்டு கோத்ரா சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீது …