Category புரட்சிகர மக்கள் அதிகாரம்

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய எம்பிக்கள் குழு!
பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணியின் இரட்டை வேடம்!

  புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 24-05-2025   பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் ஆபரேசன் சிந்தூர் நடத்தியும் கண்டறியப்படவில்லை. தேசவெறி, போர்வெறி கூச்சல் ஓய்ந்தபாடில்லை. இந்த வெறியூட்டலில் இந்துமதவெறியார்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்திய அரசால் 2000 ற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. இந்நிலையில்…

மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம்
இமயமலையை விட கனமானது.
இந்திய பொதுவுடமை கட்சி ( மாவோயிஸ்ட்) யின் அகில இந்திய பொதுச்செயலாளர்
தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!

பத்திரிக்கைச் செய்தி! 22-05-2025 இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளின் அரசியல் வழிமுறையில் தவறுகள் இருப்பினும் மக்களுக்கான அவர்களின் தியாகம் உயர்வானது. மக்களுக்காக வாழ்வது உன்னதமானது. அவருக்கு…

ஆபரேசன் காகரை நிறுத்து!

ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின் நோக்கம். இதனை அம்பலப்படுத்துகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் புவன்.  …

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கரின் அவதூறுகள் | அம்பலப்படுத்தும் தோழர் புவன்

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கரின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் புவன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!    …

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் :
இந்திய தேசிய வெறி, இந்துமதவெறி ஆகியவற்றை ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒழியாது!

    பத்திரிகை செய்தி – புரட்சிகர மக்கள் அதிகாரம் 24.04.2025   ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளிப்பகுதியில் பயங்கரவாதிகளால் (22.04.2025) அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதற்கு “தி…

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 19 மார்ச் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். கடுமையான மின் கட்டண உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி  கூலியை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும்…

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு!

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! பூமரத்துக்குழி வனத்துறை வசூல் கேட்டை இழுத்து மூடு! குந்துக்கோட்டை கொண்டை ஊசி வளைவு சாலையை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொடு! என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2025 திங்கள் காலை 11 மணிக்கு, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம்…

பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு!

    பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! என்ற முழக்கத்தின் கீழ் 25.2.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின்…

அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!

பத்திரிக்கைச் செய்தி!

அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலொன்று சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்திய பிறகு தோழர்கள் …