Category திமுக

திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முழக்கத்தோடு செங்கொடி ஏந்தி பாவல் முன்னே செல்ல மே தினப் …

திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களுக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டதன்…

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இன்றைய…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான ‪@U2Brutus‬ மைனர், முக்தார் ‪@MyIndia24x7‬ , ‪@OnionRoastChannel‬, ‪@TribesTamil‬ உள்ளிட்ட பல்வேறு …

சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவின்படி சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர்,…

டங்க்ஸ்டன் திட்டம் ரத்து:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் பங்கு போடத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், நாசகர வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த நவம்பர் 7ம் தேதியன்று அறிவித்திருந்தது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் இச்சுரங்கத் திட்டத்தை எதிர்த்து …

வேங்கைவயல்
திமுக வழங்கும் சமூகநீதியின் யோக்கியதை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “நிலை அறிக்கையில்” (status report) வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன்…

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக ஒன்றிய அரசுடன் முரண்படுவது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்து கொண்டிருப்பதோ …

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற  வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் …