அழகு

அழகு

திராவிட மாடலின் பெருமைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கல்வி முதலாளிகளின் பகற்கொள்ளையே!

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் பல்வேறு  பாடப் பிரிவுகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் முதல் நூறு இடங்களை, மொத்தமாக 146 உயர்கல்வி நிறுவனங்கள், பிடித்துள்ளன என்ற செய்தி பத்திரிக்கைகளில் பரவலாக முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆளுநரின் விமர்சனத்திற்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலினும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் …

வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை

வரலாற்றைத் திரிப்பது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. தங்களது இந்துத்துவ கொள்கைகளுக்கு அதரவாக இந்திய வரலாற்றை எப்படியேனும் மாற்றி எழுதிவிட வேண்டும் என்ற நூற்றாண்டுகால கனவை நிறைவேற்ற ஏற்ற சூழலாக உள்ள மோடி ஆட்சியில் அதற்காக பலவகையான முயற்சிகளை செய்து வருகின்றது காவி பாசிச கும்பல். தங்களது சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் …

பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

நீதிபதி ஜோசப்பின் அமர்வில்  இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு வேலைச் செய்திருக்கிறது.

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரை மோடி …

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் – 2023 :
இணையச் செய்தி ஊடகங்களை ஒடுக்கும்
மோடி அரசின் பாசிச தாக்குதல் – பாகம் – 1

சிலமாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிகார் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டக் காணொளி இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாகியது. இப்பிரச்சனையில், தேசிய ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி போன்ற மோடியின் ஜால்ரா செய்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான வன்மத்தையே செய்திகளாகப் பரப்பினர். பின்னர், இந்தக் காணொளி போலியானதென்று ஆல்ட் நீயுஸ் இணையதளம் கண்டறிந்து செய்தி …

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் வேலை நேர சட்டத் திருத்தம்!
பின்புலம் என்ன?

“தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெருக்குவதற்காகவும்” கொண்டுவந்ததாக பீற்றிக்கொள்ளப்பட்ட  தொழிற்சாலைகள்(தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வடிவு- 2023 க்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்தும், பல்வேறு தொழிற்சங்கங்களும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ததையடுத்தும், சட்ட திருத்தங்களின் செயலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தொழிலாளர் நலன்களில், மற்றவர்களைவிட …