Category உச்சிக்குடுமி மன்றம்

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

நீதிமன்றங்களின் துணைகொண்டு 2047க்குள் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தினை இரண்டு பகுதிகளாக பாஜக அரசு செய்துவருகிறது. முதல் பகுதியில், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதும் இரண்டாவது பகுதியில் அந்நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் மற்றும் சட்டப் பிரிவுகளை பழங்கால இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் தருவது இறுதியில் இது போன்ற பல தீர்ப்புகளின் வாயிலாக அரசியல் சாசனத்தை இந்துத்துவா கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை அதிகாரப்பூர்வமாக்குவது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்: கொலிஜியத்தை கலைக்க சதி செய்யும் காவி பாசிசம்

ஒரே இரவில் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி வாழ்வுரிமையைப் பறித்த, ஆபத்துகாலத் தேவைக்கான சிறுசேமிப்பையும் சிறுவாடு சேகரிப்பையும் பிடுங்கிய பாசிச மோடி அரசால் என்றாவது ஒருநாள் ஒரு இரவில் முதலாளித்துவ ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டு முதலாளித்துவப் பாசிசம் நிறுவப்படலாம்