Category காவி கார்ப்பரேட் பாசிசம்

பிபிசி ஆவணப்படமும்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும்
அம்பலமாகுது பாசிச கும்பல்! அடித்து வீழ்த்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…

ஒருவேளை பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வியுற்றால்?

தேர்தலில் பங்கேற்கும் ஓட்டுக் கட்சிகள் மட்டுமன்றி, புரட்சிகர இயக்கங்களில் சிலவும் கூட தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி வீழ்த்திவிடலாம் என கூறுகின்றன. பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவது என்றால் திமுகவிற்கு ஆதரவாக தங்களது நடைமுறையை அமைத்துக் கொள்வது என்று கூறுகிறார்கள். தேர்தல் பங்களிப்பிலும் கூட ஒரு மாற்றை முன்வைக்க வேண்டும் என்ற பொது சூத்திரத்தை வைத்துக் கொண்டு தங்களது திமுக ஆதரவை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். பாசிசத்திற்கு எதிராக பலமான தேர்தல் கூட்டணி அமைப்பதன் மூலம் மூச்சுவிடும் அவகாசம் (Breathing Space) கிடைக்கும், என்ற ‘புகழ்பெற்ற’ வாதமும் முன்வைக்கப்படுகிறது. 

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

மார்க்சியம், உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம், மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பைச் சிதைக்க வேண்டும் எனக் கூறும் தத்துவம். சாதியின் பெயரால் சக மனிதனை அடிமைக்கும் கீழாக அழுத்திவைக்கும் வர்ணாசிரம தர்மம்தான் பாரதிய தர்மம் என்றால் அதனை மார்க்சியம் சிதைக்கவே செய்யும்.

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் – பாகம் 2

இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. கொலீஜியம் அமைப்பு பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கொலீஜியம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவான…

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம்

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றக் கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைத்தது. இப்பரிந்துரையானது நீதிபதிகள் நியமன விசயத்தில் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையையும் கொலீஜியத்தின் ஒளிவுமறைவு தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை நீதிபதியாக்க பரிந்துரைதுத்ததிற்கான காரணங்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிட்டது. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக பேசிவந்த ஒரு வழக்கறிஞரை  நீதிபதியாக பரிந்துரைத்தற்குப் பலத்த எதிர்ப்பு வந்தபோதும் தான் வழங்கிய ஒப்புதலுக்கான காரணங்களை கொலீஜியம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்!

மாட்டு மூத்திரத்தைக் குடித்துக் கொண்டிருப்பதிலிருந்து மாட்டுக்கு முத்தம் தரும் பதவி உயர்வு கிடைத்திருப்பதால் சங்கிகள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் அரசு சுற்றறிக்கையில் பொதுவாக மாடு என்று குறிப்பிட்டுள்ளதால் எருமையைக் கட்டிப் பிடிப்பதா அல்லது பசுவைக் கட்டிப்பிடிப்பதா என்ற குழப்பம் சங்கிகளிடம் நீடிப்பதாகவும் அதே வேளையில் மோடியின் அறிவிப்பைக் கேட்டு மாடுகள் பீதியில் இருப்பதாகவும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தடுமாறிகொண்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்!

“நரேந்திர மோடி மட்டும் ஒரு முதல் மந்திரியாக இருக்கவில்லை என்றால் அவரே நேரடியாக வெடிகுண்டுகளை வீசியிருப்பார். மோடி இந்து சமாஜத்தின் இரட்சகர்-மீட்பாளர். இந்துக்களுக்கு சாதகமாக எல்லா சமிக்கைகளையும் கொடுத்தார்.” இது தெகல்காவின் ஸ்டிங் ஆபரேஷனில் ஓரு காவி பயங்கரவாதி கொடுத்த வாக்குமூலம்.

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – திருச்சி – கருத்தரங்கம்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்றன. இதை ஒட்டி காவி கார்ப்பரேட்…

சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது – சாதி அடிப்படையில் சமூகத்தின் பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி…

செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு!

“தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல பாஜக தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக இவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம்…