மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கையும் – காவி பாசிஸ்டுகளின் அதானி பாசமும்
மொய்த்ராவை நீக்கும் நடவடிக்கையைப் பரிந்துரைத்த பிறகு இதில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை சிபிஐ விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என நெறிமுறைகள் குழு கூறியுள்ளது. அதாவது தீர்ப்பை முதலில் எழுதிவிட்டு பிறகு விசாரணயைத் தொடங்குகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் செயல்பட்டுள்ளனர்.