Category புரட்சிகர மக்கள் அதிகாரம்

“பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” என்ற பெயரில் போர்வெறி கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டை திறந்து விட திட்டம்! உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் “விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து …

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.    இது…

விஜயை கைது செய்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம் !

கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் ! இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை 11 மணிக்கு புரட்சிகர மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 28-09-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.…

தி வயர் ஆசிரியர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அசாம் போலிசின் தேச துரோக வழக்கு!

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு! புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம் பத்திரிகை செய்தி 20-08-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே! நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த இணைய தளத்தை தொடர்ந்து ஒடுக்கிவருகிறது பாசிச மோடி அரசு. அந்த வகையில் கடந்த…

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை! கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.! சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2025 துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர்…

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!

பத்திரிக்கைச் செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 27-07-2025 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை தமிழகத்தின் அரசியல் சக்திகள் அறிவார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு போடும் எச்சில்…

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

  பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம்…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று,  பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில்  இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் மேடையில் பாடிய பாடல். பாருங்கள் பரப்புங்கள்.        …